sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்; அண்ணாமலை கடும் விமர்சனம்

/

தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்; அண்ணாமலை கடும் விமர்சனம்

தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்; அண்ணாமலை கடும் விமர்சனம்

தொடரும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்; அண்ணாமலை கடும் விமர்சனம்

25


ADDED : பிப் 05, 2025 10:58 AM

Google News

ADDED : பிப் 05, 2025 10:58 AM

25


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை; தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பயங்கரமான உண்மையாகிவிட்டது என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை;

கிளாம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்திற்கு வெளியே 18 வயது இளம்பெண் ஆட்டோவில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். உதவி கோரிய அவரின் அலறலைக் கேட்டு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு ஒருவர் தகவல் தெரிவிக்க, அந்த பெண் காப்பாற்றப்பட்டார்.

தமிழகம் முழுவதும் பாலியல் வன்கொடுமை என்பது ஒரு பயங்கரமான உண்மையாகிவிட்டது, போதைப்பொருள் எளிதில் அணுகக்கூடிய பொருளாக மாறியுள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில், 2022 மற்றும் 2024க்கு இடையில், தமிழகத்தில் NDPS சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,122 மட்டுமே.

2021ல் (ஒரு வருடத்தில்) NDPS வழக்குகளில் மொத்தமாக 9,632 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கஞ்சா மற்றும் மெத்தாம்பெட்டமைன் விற்பனை அதிகரித்து வருகிறது, ஆனால் கைதுகளின் எண்ணிக்கை குறைகிறதே எப்படி?

போதைப்பொருள் வியாபாரிகளை சுதந்திரமாக நடமாட வைக்க வேண்டும் என்பதில் தமிழக அரசு வேண்டுமென்றே மெத்தனமாகி விட்டதா? பாதுகாப்பை அதிகாரிகள் உறுதி செய்வதற்குள் இன்னும் எத்தனை பெண்கள் பாதிக்கப்படுவார்களோ?

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.






      Dinamalar
      Follow us