sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

லண்டனில் அண்ணாமலை: கட்சிப்பணி ஒருங்கிணைக்க எச்.ராஜா தலைமையில் 6 பேர் குழு

/

லண்டனில் அண்ணாமலை: கட்சிப்பணி ஒருங்கிணைக்க எச்.ராஜா தலைமையில் 6 பேர் குழு

லண்டனில் அண்ணாமலை: கட்சிப்பணி ஒருங்கிணைக்க எச்.ராஜா தலைமையில் 6 பேர் குழு

லண்டனில் அண்ணாமலை: கட்சிப்பணி ஒருங்கிணைக்க எச்.ராஜா தலைமையில் 6 பேர் குழு

28


UPDATED : ஆக 30, 2024 02:18 PM

ADDED : ஆக 30, 2024 12:34 PM

Google News

UPDATED : ஆக 30, 2024 02:18 PM ADDED : ஆக 30, 2024 12:34 PM

28


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை லண்டன் சென்றுள்ள நிலையில், கட்சி பணிகளை ஒருங்கிணைக்க 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையில், சர்வதேச அரசியல் புத்தாய்வு படிப்பில் சேர தலைமை அனுமதி அளித்தது. அதன்படி அவர் லண்டன் புறப்பட்டுச் சென்று விட்டார்; நவம்பர் இறுதியில் தான் தமிழகம் திரும்ப உள்ளார்.

குழு அமைப்பு

இந்நிலையில், அண்ணாமலை திரும்ப வரும்வரை தமிழக பா.ஜ.,வை நிர்வகிக்க எச்.ராஜா உட்பட 6 பேர் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைப்பாளராக ராஜா செயல்படுவார். குழுவில் சக்கரவர்த்தி, கனகசபாபதி, முருகானந்தம், எஸ்.ஆர்.சேகர், ராம சீனிவாசன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

கட்சியின் செயல்பாடுகள், முக்கிய முடிவுகள் குறித்து ஒருங்கிணைப்பு குழு முடிவு செய்யும். ஒவ்வொரு உறுப்பினரும், ஒன்று அல்லது இரண்டு மண்டலங்களுக்கு பொறுப்பாளர்களாக இருந்து வழிநடத்துவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us