ADDED : அக் 14, 2024 06:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ஆக்ஸ்போர்டு பல்கலையில் மூன்று மாத அரசியல் புத்தாய்வு படிப்பில் சேர்ந்து படிக்க, கட்சித் தலைமை அனுமதியுடன் ஆக., 27ல் லண்டன் சென்றார்.
இந்நிலையில், அண்ணாமலை நவ., 23ல் சென்னை திரும்புகிறார். அடுத்த ஆண்டு பிப்ரவரியில், மீண்டும் அரசியல் புத்தாய்வு படிப்புக்கான சான்றிதழ் பெறச் செல்வார்.இதனிடையே, தமிழக பா.ஜ.,வில் பல மாவட்ட நிர்வாகிகளை அண்ணாமலை மாற்றியமைக்க உள்ளார்.
பாதிக்கும் மேற்பட்ட இடங்களில், இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி புதுப்பொலிவூட்ட உள்ளார். கட்சியின் தலைமை அவருக்கு பச்சைக்கொடி காட்டியுள்ளதால், அவரது நடவடிக்கையில் வேகம் இருக்கும் என்கின்றனர் கட்சி நிர்வாகிகள்.