sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கலைச்செம்மல் விருதுகள் 18 பேருக்கு அறிவிப்பு

/

கலைச்செம்மல் விருதுகள் 18 பேருக்கு அறிவிப்பு

கலைச்செம்மல் விருதுகள் 18 பேருக்கு அறிவிப்பு

கலைச்செம்மல் விருதுகள் 18 பேருக்கு அறிவிப்பு


ADDED : பிப் 03, 2024 01:25 AM

Google News

ADDED : பிப் 03, 2024 01:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஓவியம் மற்றும் சிற்பக்கலையில் சாதனை படைத்த, 18 கலைஞர்களுக்கு, தமிழக அரசின் கலைச்செம்மல் விருதுகள் அறிவிக்கப்பட்டுஉள்ளன.

தமிழக அரசு கலை பண்பாட்டுத் துறையின், ஓவிய நுண்கலை குழு வழியாக, ஆண்டுக்கு ஆறு கலைஞர்களுக்கு, கலைச்செம்மல் விருது, தலா 1 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.

இவ்விருதுக்கான கலைஞர்களை தேர்வு செய்ய, தேர்வாளர்கூட்டம், கலைபண்பாட்டுத்துறை இயக்குனர் காந்தி தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில், 2021 - 22 முதல் 2023 - 24 வரை, மூன்று ஆண்டுகளுக்கு 18 கலைஞர்களை தேர்வு செய்தனர்.

மரபுவழி ஓவியம் பிரிவில், ஓவியர் ராமு என்கிற ராமதாஸ், மணியம் செல்வன், ராஜமோகன், வாசுகி லட்சுமி நாராயணன், வேல்முருகன்; மரபுவழி சிற்பம் பிரிவில், செல்வநாதன், ராஜேந்திரன், உலோக சிற்பக்கலைஞர் ரவீந்திரன், மர சிற்பக்கலைஞர் பால்ராஜ்;

நவீன ஓவியம் பிரிவில் விஸ்வம், சுப்பிரமணியம், பிரபுராம், அருணகிரி, புகழேந்தி, அதிவீரராம பாண்டியன்; நவீன சிற்பம் பிரிவில் கருணாமூர்த்தி, விஜயவேலு, ஹேமலதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சர்வதேச அமைப்பான யுனெஸ்கோ, சென்னையின் பாரம்பரியமிக்க செவ்வியல் இசையின் சிறப்புகளுக்கு, பெருமை சேர்க்கும் வகையில், இசை நகரமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பை கொண்டாடும் வகையில், கலை பண்பாட்டுத்துறை சார்பில், சென்னையில் உள்ள இசைக்கல்லுாரி வளாகத்தில், நாளை மறுநாள் விழா நடக்க உள்ளது.

விழாவில், அமைச்சர்சாமிநாதன், கலைச்செம்மல் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட, ஓவிய, சிற்பக் கலைஞர்களுக்கு விருதுகளைவழங்குகிறார்.

மேலும், தமிழகம் முழுதும் கிராமிய கலைகளில் நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற, 15 இளம் கலைஞர்களுக்கு, அமைச்சர் பரிசு வழங்குகிறார்.






      Dinamalar
      Follow us