ADDED : பிப் 19, 2024 12:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருதுநகர் அருகே சங்கரலிங்காபுரத்தைச் சேர்ந்த சுந்தரலட்சுமி, 50, என்பவருக்கு சொந்தமாக ஒ.கோவில்பட்டியில் நாக்பூர் சான்றிதழ் பெற்ற 60 அறைகள் கொண்ட பட்டாசு ஆலை உள்ளது.
இந்த ஆலையில் நேற்று மதியம், 3:30 மணிக்கு பணியாளர்கள் இல்லாதபோது மீதம் வைக்கப்பட்டிருந்த மருந்து கலவையில் அதிக வெப்பத்தால் வெடிவிபத்து ஏற்பட்டது. இதில், நான்கு அறைகள் இடிந்து சேதமாகின. தீ விபத்துக்குள்ளான பகுதிகளின் உள்ளே மணி மருந்து கலவை இருப்பதால் தீயணைப்புத் துறையினர் ஜே.சி.பி., இயந்திரத்தின் மூலம் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆமத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

