ADDED : ஜன 27, 2024 02:14 PM

சென்னை: தமிழகத்தில் ஐ.பி.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
இது தொடர்பாக தமிழக உள்துறை செயலாளர் அமுதா பிறப்பித்த உத்தரவில் கூறியுள்ளதாவது:
காத்திருப்போர் பட்டியலில் இருந்த சீனிவாச பெருமாள் திருவள்ளூர் மாவட்ட எஸ்.பி., ஆகவும்
திருப்பூர் மாவட்ட எஸ்.பி., ஆக அபிஷேக் குப்தாவும் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும்தெற்கு மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி., - பகோர்லா செபாஸ் கல்யாண்
சிஐடி பாதுகாப்பு பிரிவு எஸ்.பி., - சக்திவேல்
சென்னை கொளத்தூர் துணை கமிஷனர் - பாண்டியராஜன்
தெற்கு சரக லஞ்ச மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு எஸ்.பி., - சாமிநாதன்
உளவுப்பிரிவு, தடை செய்யப்பட்ட குற்றங்கள் பிரிவு எஸ்.பி., -ஷியாமளா தேவி
வடக்கு சரக லஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவு எஸ்.பி., - சரவணகுமார்
கோவை வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் - ரோஹித் நாதன் ராஜகோபால்
திருப்பூர் வடக்கு சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் - ராஜராஜன்
நெல்லை தலைமையிடத்து துணை கமிஷனர் - அனிதா ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

