sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மாஜி அமைச்சர் சுரேஷ்ராஜன் மீது வழக்கு

/

மாஜி அமைச்சர் சுரேஷ்ராஜன் மீது வழக்கு

மாஜி அமைச்சர் சுரேஷ்ராஜன் மீது வழக்கு

மாஜி அமைச்சர் சுரேஷ்ராஜன் மீது வழக்கு


ADDED : ஜூலை 31, 2011 11:10 PM

Google News

ADDED : ஜூலை 31, 2011 11:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகர்கோவில்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் காங்., தலைவர் சோனியா பற்றி அவதூறாக பேசியதாக முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம், மேல்புறம் ஒன்றிய தி.மு.க., சார்பில் களியக்காவிளையில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், தலைமை கழக பேச்சாளர் வாகை முத்தழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முத்தழகன் பேசும் போது ஜெ., பற்றியும், காங்., தலைவர் சோனியா பற்றியும் கடுமையாக விமர்சித்து பேசினார். அப்போது, கூட்டத்தில் நின்ற அ.தி.மு.க., மற்றும் காங்கிரசார் எதிர்ப்பு தெரிவித்தனர். சிலர் மேடை நோக்கி கல்வீசினர். இதனால், பொதுக்கூட்டம் தடைபட்டது. தக்கலை டி.எஸ்.பி., சுந்தர்ராஜ் தலைமையில் போலீசார், தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினரை கலைத்தனர்.

இதுகுறித்து விளவங்கோடு தொகுதி அ.தி.மு.க., செயலர் உதயகுமார், இளைஞர் காங்., தலைவர் பிரேயர் பிரின்ஸ் கொடுத்த புகாரின் பேரில், சுரேஷ்ராஜன் மற்றும் முத்தழகன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us