sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஏமாளிகளா கிரிக்கெட் ரசிகர்கள்? ஐ.பி.எல்., டிக்கெட் கட்டண வசூலில் முறைகேடு நடப்பதாக புகார்!

/

ஏமாளிகளா கிரிக்கெட் ரசிகர்கள்? ஐ.பி.எல்., டிக்கெட் கட்டண வசூலில் முறைகேடு நடப்பதாக புகார்!

ஏமாளிகளா கிரிக்கெட் ரசிகர்கள்? ஐ.பி.எல்., டிக்கெட் கட்டண வசூலில் முறைகேடு நடப்பதாக புகார்!

ஏமாளிகளா கிரிக்கெட் ரசிகர்கள்? ஐ.பி.எல்., டிக்கெட் கட்டண வசூலில் முறைகேடு நடப்பதாக புகார்!

26


ADDED : மார் 31, 2025 09:41 AM

Google News

ADDED : மார் 31, 2025 09:41 AM

26


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகளை காண்பதற்கான டிக்கெட் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படுவதால், கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நாடு முழுவதும் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. ரசிகர்கள் ஆர்வத்துடன் போட்டிகளை கண்டு ரசித்து வருகின்றனர். போட்டிகளை காணும் ஆர்வத்தில் வரும் ரசிகர்களை ஏமாற்றி, கூடுதலாக கட்டணம் வசூலித்து முறைகேடு செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழகத்தில் கேளிக்கை வரி, அடிப்படைக் கட்டணத்தில் 25 சதவீதம் மட்டுமே வசூலிக்கப்பட வேண்டும். ஆனால், சேப்பாக்கம் மைதானத்தில், சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி நடந்த போது, 2343 ரூபாய் அடிப்படை கட்டணம் கொண்ட ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி டிக்கெட்டுக்கு கேளிக்கை வரி 781 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. இது நியாயமாக வசூலிக்கப்பட வேண்டிய வரியைக் காட்டிலும் 196 ரூபாய் அதிகம் என்கின்றனர் ரசிகர்கள்.

அதேபோல, கேளிக்கை வரிக்கும் சேர்த்து ஜி.எஸ்.டி., வரி விதிக்கப்பட்டுள்ளது. அதாவது வரி மீது வரி விதிப்பு செய்து கூடுதல் கட்டணம் வசூலித்துள்ளனர். இதனால், 2343 ரூபாய் அடிப்படை கட்டணம் கொண்ட ஐ.பி.எல்., டிக்கெட், ரசிகர் கடைசியில் வாங்கும் போது 4,000 ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. டிக்கெட்டில் உரிய கட்டணம், வரி தொடர்பான பிரேக் அப் விவரங்களும் இல்லை.

கிரிக்கெட் போட்டியை காண ஆர்வத்துடன் வரும் ரசிகர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கில் இத்தகைய முறைகேடான கட்டண வசூல் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நியாயமாக, டிக்கெட் கட்டணம், அதன் மீதான கேளிக்கை வரி, ஜிஎஸ்டி வரி ஆகியவற்றுடன் மொத்த கட்டணத்துக்கு சரியான பிரேக் அப் வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us