sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

போதையில் இருக்கிறாரா?: அரசு பஸ் ஓட்டுநர்களிடம் இனி தினமும் பரிசோதனை

/

போதையில் இருக்கிறாரா?: அரசு பஸ் ஓட்டுநர்களிடம் இனி தினமும் பரிசோதனை

போதையில் இருக்கிறாரா?: அரசு பஸ் ஓட்டுநர்களிடம் இனி தினமும் பரிசோதனை

போதையில் இருக்கிறாரா?: அரசு பஸ் ஓட்டுநர்களிடம் இனி தினமும் பரிசோதனை

11


ADDED : ஏப் 06, 2025 04:20 AM

Google News

ADDED : ஏப் 06, 2025 04:20 AM

11


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:பஸ் ஓட்டுநர், நடத்துநர் மது போதையில் இருக்கின்றனரா என்பதை கண்டறியும் சோதனை, போக்குவரத்து கழகங்களில் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகம் முழுதும், 20,000க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. பெரும்பாலான ஓட்டுநர், நடத்துநர் கவனத்துடன், பஸ்களை பாதுகாப்பாக இயக்கி வருகின்றனர். பயணியரின் நன்மதிப்பையும் பெற்று வருகின்றனர்.

ஒரு சிலர் மது போதையில் பணிக்கு வர முயற்சிப்பதால், போக்குவரத்து கழகங்களுக்கு அவப்பெயர் ஏற்படுகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் சில ஊழியர்கள் மது போதையில் இருப்பதாக, பயணியர் புகார் தெரிவித்துள்ளனர்.

இது, பயணியர் பாதுகாப்பு பிரச்னை என்பதால், தமிழகம் முழுதும் உள்ள போக்குவரத்து கழகங்களுக்கு, 1.79 கோடி ரூபாய் செலவில், ரத்தத்தில் உள்ள ஆல்கஹால் அளவை மதிப்பிடும் கருவிகள் வாங்கப்பட்டு உள்ளன.

இந்தக் கருவியில், சோதனைக்கு உட்படுத்தப்படும் ஓட்டுநர் பெயர் உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் காகித வடிவில் பெற முடியும்.

இக்கருவியை பயன்படுத்தி, தினமும் பணிக்கு வரும் ஓட்டுநர், நடத்துநர்களிடம் சோதனை செய்ய உத்தரவிடப்பட்டு உள்ளது. மது குடித்திருப்பது தெரியவந்தால், சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த திடீர் சோதனை வாயிலாக, பயணியர் பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதோடு, மதுவால் ஏற்படும் விபத்து முற்றிலும் தவிர்க்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us