ADDED : ஜன 01, 2024 11:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருச்சி: திருச்சி, பொன்மலை அருகே விவேகானந்தர் நகரை சேர்ந்தவர் முத்துப்பாண்டி, 27. திருமணமாகாத அவர், கோவையில், 'ஏசி' மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.
விடுமுறையில் சொந்த ஊர் வந்த அவர், நேற்று முன்தினம், அதே பகுதியை சேர்ந்த நண்பர் ஸ்டான்லி, 29, என்பவருடன் மது அருந்தினார்.
அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில், ஆத்திரமடைந்த ஸ்டான்லி, மறைத்து வைத்திருந்த கத்தியால், முத்துப்பாண்டியின் கழுத்தில் குத்தினார். பலத்த காயமடைந்த முத்துப்பாண்டி, சம்பவ இடத்திலேயே இறந்தார். போலீசார், ஸ்டான்லியை கைது செய்து விசாரிக்கின்றனர்.

