sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பள்ளி மாணவிகளுக்கு அலைபேசியில் ஆபாச படம்; போக்சோவில் உதவியாளர் கைது

/

பள்ளி மாணவிகளுக்கு அலைபேசியில் ஆபாச படம்; போக்சோவில் உதவியாளர் கைது

பள்ளி மாணவிகளுக்கு அலைபேசியில் ஆபாச படம்; போக்சோவில் உதவியாளர் கைது

பள்ளி மாணவிகளுக்கு அலைபேசியில் ஆபாச படம்; போக்சோவில் உதவியாளர் கைது

12


ADDED : ஜன 21, 2025 05:03 AM

Google News

ADDED : ஜன 21, 2025 05:03 AM

12


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரியாபட்டி : விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணரில் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு அலைபேசியில் ஆபாச படம் காட்டிய அலுவலக உதவியாளரை அருப்புக்கோட்டை மகளிர் போலீசார் கைது செய்தனர்.

இப்பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவ--மாணவியர் படிக்கின்றனர். சில தினங்களுக்கு முன் இப்பள்ளியில் விழிப்புணர்வு முகாம் நடந்தது. அதில் பாலியல் சீண்டல் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. அப்போது இரு மாணவிகள் விழிப்புணர்வு முகாம் நடத்திய அலுவலர்களிடம், அலுவலக உதவியாளராக பணிபுரியும் ராஜமாணிக்கம் அலைபேசியில் ஆபாச படங்களை தொடர்ந்து காண்பித்து தொந்தரவு செய்வதாக புகார் அளித்தனர்.

இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு குழு சார்பாக அருப்புக்கோட்டை மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அலுவலக உதவியாளரான ராஜமாணிக்கத்தை போக்சோவில் கைது செய்து விசாரிக்கின்றனர்.

மேலும் பலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக சந்தேகம் உள்ளதாக போலீசார் கூறினர்.






      Dinamalar
      Follow us