sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தேனி போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை கைதி மீது தாக்குதல்; பகீர் வீடியோவால் பரபரப்பு

/

தேனி போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை கைதி மீது தாக்குதல்; பகீர் வீடியோவால் பரபரப்பு

தேனி போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை கைதி மீது தாக்குதல்; பகீர் வீடியோவால் பரபரப்பு

தேனி போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை கைதி மீது தாக்குதல்; பகீர் வீடியோவால் பரபரப்பு

22


UPDATED : ஜூலை 02, 2025 05:33 PM

ADDED : ஜூலை 02, 2025 01:08 PM

Google News

22

UPDATED : ஜூலை 02, 2025 05:33 PM ADDED : ஜூலை 02, 2025 01:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி: தேனி போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை கைதி மீது போலீசார் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது. இது தொடர்பாக, சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., ஜெரால்டு அலெக்ஸாண்டர் விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சிவகங்கை மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு வந்த மதுரை திருமங்கலம் டாக்டர் நிகிதாவின் காரில் 9.5 பவுன் திருடப்பட்ட வழக்கில், திருப்புவனம் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோயில் பாதுகாப்பு பணியில் இருந்த தனியார் நிறுவன காவலாளி அஜித்குமார் 29, இறந்தார்.

அதுமட்டுமின்றி அஜித் குமாரை போலீசார் தாக்கும் வீடியோ வெளியானது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை கிளப்பி உள்ளது. தி.மு.க., ஆட்சியில் போலீஸ் மரணங்கள் அடிக்கடி நடக்கிறது என எதிர்க்கட்சிகள் கடும் குற்றம் சாட்டி வருகிறது.

தி.மு.க., ஆட்சியில் போலீஸ் ஸ்டேஷன் மற்றும் போலீஸ் விசாரணையின் போது உயிரிழந்தவர்களின் பெயர் பட்டியலை தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார். இந்நிலையில், தேனி போலீஸ் ஸ்டேஷனில் விசாரணை கைதி மீது போலீசார் சரமாரியாக தாக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேனியில் பொங்கல் பண்டிகையின் போது போதையில் சுற்றிய ஆட்டோ டிரைவரைப் பிடித்த தேவதானப்பட்டி போலீசார், அவரை ஸ்டேஷனில் வைத்து மூர்க்கத்தனமாகத் தாக்கும் காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ், ஸ்டேஷனில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி., கேமராவில் பதிவான காட்சிகள் பெறப்பட்டுள்ளன.

இது தொடர்பாக, சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி., ஜெரால்டு அலெக்ஸாண்டர் விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இன்ஸ்., உள்பட 5 பேர் இடமாற்றம்

தாக்குதல் நடந்த வீடியோ வெளியான நிலையில் இன்ஸ்பெக்டர் அபூதுல்யா, போலீசார் மாரிச்சாமி, பாண்டி, வாலி உள்பட 5 பேர் ஆயுதப்படைக்கு இடமாற்றம்






      Dinamalar
      Follow us