தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/தமிழகம்/ கவன ஈர்ப்பு தீர்மானம்; சபாநாயகர் புது உத்தரவு

கவன ஈர்ப்பு தீர்மானம்; சபாநாயகர் புது உத்தரவு

கவன ஈர்ப்பு தீர்மானம்; சபாநாயகர் புது உத்தரவு


ADDED : ஜன 09, 2025 01:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 09, 2025 01:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ''சட்டசபையில் விவாதத்திற்கு வரும் முன்பே, கவன ஈர்ப்பு தீர்மானங்களை எம்.எல்.ஏ.,க்கள் வெளியிடக் கூடாது. ஊடகங்களும் அதை பிரசுரிக்கக் கூடாது,'' என, சபாநாயகர் அப்பாவு கூறினார்.

சட்டசபையில் நேற்று அவர் வெளியிட்ட அறிவிப்பு:

என்னிடமோ, சட்டசபை செயலரிடமோ, எம்.எல்.ஏ.,க்கள் எழுதிக் கொடுக்கும் கவன ஈர்ப்பு தீர்மானம் உள்ளிட்ட அலுவல்களை, உடனடியாக சமூக வலைதளங்களில் வெளியிடுகின்றனர்; ஊடகங்களுக்கும் கொடுக்கின்றனர்.

சட்டசபை விதிப்படி இப்படி வெளியிடக் கூடாது. எனவே, இனி எம்.எல்.ஏ.,க்கள் கொடுக்கும் கவன ஈர்ப்பு தீர்மானங்களை, சட்டசபையில் விவாதத்திற்கு வரும் முன், சமூக வலைதளங்களில் வெளியிடக் கூடாது. ஊடகங்களும் அவற்றை பிரசுரிக்கக் கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us