sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருச்செந்தூரில் ஆவணித்திருவிழா துவக்கம்

/

திருச்செந்தூரில் ஆவணித்திருவிழா துவக்கம்

திருச்செந்தூரில் ஆவணித்திருவிழா துவக்கம்

திருச்செந்தூரில் ஆவணித்திருவிழா துவக்கம்


ADDED : ஆக 19, 2011 06:46 PM

Google News

ADDED : ஆக 19, 2011 06:46 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதையொட்டி, கோயில்நடை அதிகாலை 1 மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், மற்ற காலங்கள் தொடர்ந்தன. அதிகாலை 5.25 மணிக்கு கோயில் வளாக செப்புக்கொடிமரத்தில், அரிகர சுப்பிரமணிய பட்டர் ஆவணித் திருவிழா துவக்க கொடியேற்றினார். தொடர்ந்து, கொடிமரத்திற்கு பால், இளநீர், விபூதி,மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட 16 வகை அபிஷேகம் செய்யப்பட்டது. பின், மலர், மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்திற்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். மொத்தம் 12 நாள் திருவிழாவில் தினமும் சுவாமி - அம்பாள் சிறப்பு பூஜை, தீபாராதனை, வீதியுலா நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், 10ம் திருவிழாவான, ஆக.,28ம் தேதி காலை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பாஸ்கரன், அதிகாரிகள் செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us