மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி பட்டாசு வெடிப்பதை தவிர்க்கவும்
மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி பட்டாசு வெடிப்பதை தவிர்க்கவும்
ADDED : அக் 31, 2024 05:24 AM

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் கும்பாபிேஷக திருப்பணிகள் நடந்து வருகின்றன. இதற்காக, சித்திரை வீதிகளில் உள்ள பெரிய கோபுரங்களில் மூங்கில் சாரங்கள் அமைக்கப்பட்டு, திரைச் சீலையால் மூடப்பட்டுள்ளது.
தீபாவளியை முன்னிட்டு, இன்று, கோவில் அருகில் உள்ள ஆவணி மூல வீதி பகுதிகளில் குடியிருப்போர் பட்டாசு வெடிக்கும் போது, தீப்பற்றக் கூடிய பட்டாசுகளை வெடிக்கும் பட்சத்தில், அது கோவில் கோபுர சாரங்கள், திரைச்சீலை மீது பட வாய்ப்புள்ளதால், அவ்வகை பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என, கோவில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இன்று தங்க கவசம்
தீபாவளி சிறப்பு தரிசனமாக, இன்று காலையும், மாலையும் மூலஸ்தான அம்மனுக்கு தங்க கவசம், வைரக்கிரீடம், சுவாமி சுந்தரேஸ்வரருக்கு வைர நெற்றி பட்டையும் அணிவிக்கப்படுகிறது. நவ., 2 முதல், கோலாட்ட உற்ஸவம் தொடங்குகிறது.

