ADDED : அக் 16, 2024 10:50 PM

திருப்பூர்:''நடப்பாண்டில் ஆயத்த ஆடை ஏற்றுமதியில், 20 சதவீத வளர்ச்சி இருக்கும்,'' என ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.,) நம்பிக்கை தெரிவித்துள்ளது.
பல்வேறு சவால்களை சந்தித்து வந்த ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், கடந்த பிப்., மாதத்தில் இருந்து இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது. குறிப்பாக, ஐந்து மாதங்களாக ஏற்றுமதி வர்த்தகத்தில் வளர்ச்சி நிலை எட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ஏ.இ.பி.சி., தென் மண்டல தலைவர் சக்திவேல் கூறுகையில், ''இதுவரை இல்லாத அளவு செப்டம்பர், மாத ஏற்றுமதி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 17.30 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது, 9,327 கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்துள்ளது.
''ஒட்டுமொத்தமாக, இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், நடப்பு நிதியாண்டில், 20 சதவீத வளர்ச்சி நிலையை எட்டும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது,'' என்றார்.