ADDED : டிச 12, 2024 01:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : மின் தடை இழப்பீட்டுக்கு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விதிகளை ஏற்படுத்தியுள்ளது.
நகரங்களில் உயரழுத்த மின் இணைப்பில் மாதம், 600 நிமிடங்களுக்கு மேல் மின் தடை ஏற்பட்டால், ஒவ்வொரு நிமிடத்துக்கும், 5 காசு; கிராமங்களில், 1,200 நிமிடங்களுக்கு மேல் ஒவ்வொரு நிமிடத்துக்கு, 5 காசு இழப்பீடு வழங்க வேண்டும்.
நகரங்களில் மாதம், 15 முறைக்கு மேல் மின் தடை ஏற்படும்போது, ஒவ்வொரு முறை மின் தடை ஏற்படுவதற்கும், 50 காசும்; கிராமங்களில், 25 முறைக்கு மேல் மின் தடை ஏற்படும்போது, ஒவ்வொரு முறைக்கும், 50 காசும் இழப்பீடு வழங்க வேண்டும்.
இழப்பீடு கொடுப்பதற்கான அவகாசம் கடந்த ஆகஸ்ட்டில் முடிவடைந்த நிலையில் தற்போது வரும் பிப்ரவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

