sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஐ.டி., அதிகாரிகள் மீது தாக்குதல் தி.மு.க.,வினர் ஜாமின் ரத்து

/

ஐ.டி., அதிகாரிகள் மீது தாக்குதல் தி.மு.க.,வினர் ஜாமின் ரத்து

ஐ.டி., அதிகாரிகள் மீது தாக்குதல் தி.மு.க.,வினர் ஜாமின் ரத்து

ஐ.டி., அதிகாரிகள் மீது தாக்குதல் தி.மு.க.,வினர் ஜாமின் ரத்து


ADDED : ஜன 03, 2024 12:55 AM

Google News

ADDED : ஜன 03, 2024 12:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் உறவினர் வீடுகளில் 2023, மே 25ல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடந்தது. அப்போது அதிகாரிகளை தி.மு.க.,வினர் தாக்கினர்.

பாதிக்கப்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள், போலீசில் புகார் அளித்தனர். வழக்கில் தொடர்புடைய 15 பேர் கரூர் நீதிமன்றத்தில் ஜாமின் பெற்றனர்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி வருமான வரித்துறை அதிகாரிகள், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர்.

அதில், அதிகாரிகளை தாக்கிய நான்கு பேருக்கு, கரூர் மாவட்ட நீதிமன்றம் ஜாமின் வழங்கி உள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும் என கோரினர்.

இம்மனு நீதிபதி தண்டபாணி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வருமான வரித்துறை மூத்த வழக்கறிஞர், ஜாமின் மனுவை ரத்து செய்ய வேண்டும் என வாதிட்டார்.

இதை பதிவு செய்த நீதிபதி, கரூர் மாவட்ட நீதிமன்றம், நால்வருக்கு வழங்கிய ஜாமின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us