sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மஞ்சள் நிறத்துக்கு மாறிய பவானி ஆறு; குடிநீராக பயன்படுத்தும் மக்கள் அச்சம்

/

மஞ்சள் நிறத்துக்கு மாறிய பவானி ஆறு; குடிநீராக பயன்படுத்தும் மக்கள் அச்சம்

மஞ்சள் நிறத்துக்கு மாறிய பவானி ஆறு; குடிநீராக பயன்படுத்தும் மக்கள் அச்சம்

மஞ்சள் நிறத்துக்கு மாறிய பவானி ஆறு; குடிநீராக பயன்படுத்தும் மக்கள் அச்சம்

3


ADDED : மார் 29, 2025 04:03 AM

Google News

ADDED : மார் 29, 2025 04:03 AM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம் : கோவை மாவட்டம், சிறுமுகை அருகே பவானி ஆறு மஞ்சள் நிறமாக மாறி உள்ளது. இந்த தண்ணீரை குடிநீராக வழங்குவதால், பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது.

சிறுமுகை அருகே உள்ள மூளையூரில் பவானி ஆற்றில் இருந்து, காரமடை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னகள்ளிப்பட்டி, முடுதுறை, இரும்பொறை, இலுப்பநத்தம், பெள்ளேபாளையம், ஜடையம்பாளையம் ஆகிய ஆறு ஊராட்சிகளின் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

கடந்த மாதம் சிறுமுகை அருகே ஆலாங்கொம்பு பழையூரில் இருந்து, சிறுமுகை ராமர் கோவில் வரை, பவானி ஆற்றுத் தண்ணீர் கருப்பு நிறமாக மாறி இருந்தது. ரசாயன சாயக் கழிவு நீரால், ஆற்றுத் தண்ணீர் மாசு அடைந்துள்ளது என, ஆய்வு செய்த மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

Image 1398428


இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக சிறுமுகை விஸ்கோஸ் பம்பு ஹவுசில் இருந்து, மூளையூர் வரை பவானி ஆற்றுத் தண்ணீர் மேல் பகுதியில் மஞ்சள் நிறத்தில் குப்பை போன்ற துகள்கள் படிந்துள்ளன.

இந்த தண்ணீரை குடிநீர் வடிகால் வாரியம் எடுத்து, சம்பரவள்ளி அருகே கோவில் மேட்டில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்தில், சுத்தம் செய்து ஆறு ஊராட்சிகளுக்கு குடிநீராக வழங்கி வருகிறது.

இந்த தண்ணீரை குடித்தால் ஏதாவது பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம், பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பவானி ஆற்றுத் தண்ணீர் மஞ்சள் நிறமாக மாறியுள்ளதை அறிந்து, கோவை மற்றும் திருப்பூரைச் சேர்ந்த மாசு கட்டுப்பாடு வாரிய பறக்கும் படை அதிகாரிகள் சிபிசக்கரவர்த்தி, கதிர்வேல், லாவண்யா ஆகியோர் சிறுமுகை அருகே பவானி ஆற்றை ஆய்வு செய்தனர். பின்னர், பரிசோதனைக்கு தண்ணீரை எடுத்துச் சென்றுள்ளனர்.






      Dinamalar
      Follow us