sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு பறவைகளின் வருகை அதிகரிப்பு

/

வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு பறவைகளின் வருகை அதிகரிப்பு

வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு பறவைகளின் வருகை அதிகரிப்பு

வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு பறவைகளின் வருகை அதிகரிப்பு


ADDED : ஜன 13, 2025 07:41 AM

Google News

ADDED : ஜன 13, 2025 07:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்கல்பட்டு: வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு, வெளிநாட்டு பறவைகளின் வரத்து அதிகரித்து உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே, உலக புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. சரணாலயம் அமைந்துள்ள இந்த ஏரி, 86 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

இந்தாண்டு பெய்த வடகிழக்கு பருவமழையின் காரணமாக, 16 அடி உயரம் நீர்ப்பிடிப்பு கொண்ட ஏரி, முழு கொள்ளளவு நிரம்பியது.

இந்நிலையில், தற்போது வங்கதேசம், மியான்மர், இலங்கை, சைபீரியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், அதிக அளவிலான பறவைகள் வேடந்தாங்கலுக்கு வருகின்றன.

வழக்கமாக, செப்டம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில், குளிர்காலத்தில் பறவைகள் வரத் துவங்குகின்றன.

டிசம்பர் முதல் பிப்ரவரி மாதங்கள் பறவைகளின் வருகை அதிகமாக இருக்கும். மார்ச், ஏப்., மே மாதத்தின் கடைசி வாரத்தில், பறவைகள் எண்ணிக்கை மிகவும் குறைந்து காணப்படும்.

அந்த வகையில் தற்போது கூழைக்கடா, கரண்டிவாயன், நத்தைக்குத்தி நாரை, பாம்புதாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், மிளிர் உடல் அரிவாள் மூக்கன், சாம்பல் நாரை, முக்குளிப்பான் மற்றும் வக்கா, புள்ளி மூக்கு வாத்து, வண்ண நாரை உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் வந்துள்ளன. சுமார் 30,000க்கும் அதிகமான பறவைகள் வந்து தங்கி, இனப்பெருக்கம் செய்து வருகின்றன.

'டெலஸ்கோப்' பழுது

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் உள்ள கண்காணிப்பு கோபுரத்தில், கடந்தாண்டு அமைக்கப்பட்ட 'டெலஸ்கோப்' பழுதடைந்துள்ளது. இதனால், பறவைகள் சரணாலயத்திற்கு அருகே, கடைகளில் விற்பனை செய்யப்படும் டெலஸ்கோப்பை, ஒரு மணி நேரத்திற்கு 100 ரூபாய் வீதம் கட்டணம் செலுத்தி, சுற்றுலா பயணியர் வாங்கி பயன்படுத்த வேண்டியுள்ளது.பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு, சுற்றுலா பயணியர் அதிகளவில் வருகை தருவர் என்பதால், கண்காணிப்பு கோபுரத்தில் நவீன டெலஸ்கோப் பொருத்த வேண்டும் என, பயணியர் எதிர்பார்க்கின்றனர்.








      Dinamalar
      Follow us