sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா; சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி

/

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா; சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா; சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா; சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி

29


ADDED : ஜன 21, 2025 01:00 PM

Google News

ADDED : ஜன 21, 2025 01:00 PM

29


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து அவரது அறிக்கை:

சமீபத்தில் ஒரு விழாவில் பங்கேற்ற சபாநாயகர் அப்பாவு, அங்கிருந்த ஞானசேகரன் என்ற நபரைக் கேலி செய்ய, அண்ணா பல்கலைக்கழக பாலியல் குற்றவாளி ஞானசேகரனைக் குறிப்பிட்டு, “தம்பி ஞானசேகரன்” என்று பேசியுள்ளார்.

தி.மு.க., நிர்வாகியாயிற்றே, பாசம் இருக்கத் தானே செய்யும். தன்னை அறியாமல் அதனை வெளிப்படுத்தியிருக்கிறார் சபாநாயகர் அப்பாவு.

பாலியல் குற்றவாளியான தி.மு.க., நிர்வாகி ஞானசேகரனுக்குப் பக்கபலமாக இருந்த அந்த “சார்” யாரென்று, இன்று வரை காவல்துறை கண்டுபிடிக்கவில்லை.

தமிழக அரசு இந்த வழக்கை நேர்மையாக விசாரிக்கிறதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் இருக்கும் நிலையில், ஒரு பெண்ணுக்கு நேர்ந்த பாலியல் கொடுமை, உங்களுக்கு மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவு அவர்களே?

இவ்வாறு அவர் கூறி உள்ளார். இந்த எக்ஸ் தள பதிவில், சபாநாயகர் அப்பாவு பேசும் வீடியோ ஒன்றையும் அண்ணாமலை இணைத்து வெளியிட்டு உள்ளார்.






      Dinamalar
      Follow us