ADDED : ஜன 25, 2026 05:45 AM
சென்னை: சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பதிலுரையை, பா.ஜ., புறக்கணித்த நிலையில், அ.தி.மு.க.,வினர் சபைக்கே வரவில்லை.
சட்டசபையில், நடப்பாண்டுக்கான முதல் கூட்டம், கடந்த 20ம் தேதி துவங்கியது. தேசிய கீதம் இசைக்கப்படாததால், உரை நிகழ்த்தாமல், கவர்னர் ரவி திரும்பி சென்றார்.
அவர து உரையை தமிழில் சபாநாயகர் அப்பாவு வாசித்தார். கவர்னர் உரை மீது, 22 மற்றும் 23ம் தேதிகளில் விவாதம் நடந்தது. இதில், பல்வேறு கட்சிகளின் எம்.எல்.ஏ.,க்கள் பேசினர். இதை தொடர்ந்து, விவா தத்திற்கு நேற்று, முதல்வர் ஸ்டாலின் பதிலுரை வழங்கினார்.
இதை புறக்கணிக்கும் வகையில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க் கள் யாரும் நே ற்று சட் டசபைக்கு வரவில்லை.
பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி மட்டும், சட்டசபைக்கு வந்திருந்தார். ஆனால், முதல்வர் ஸ்டாலின் பதிலுரையின்போது, சபையில் இருப்பதை தவிர்த்து வெளியேறினார். அவர் பதிலுரையை முடித்ததும், மீண்டும் அவர் வந்தார்.

