டில்லியில் அமித்ஷா தலைமையில் பாஜ உயர்மட்ட குழு கூட்டம்: முக்கிய ஆலோசனை
டில்லியில் அமித்ஷா தலைமையில் பாஜ உயர்மட்ட குழு கூட்டம்: முக்கிய ஆலோசனை
UPDATED : செப் 03, 2025 06:52 PM
ADDED : செப் 03, 2025 04:54 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: டில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் பாஜ உயர்மட்ட குழு கூட்டம் நடந்தது.
டில்லியில் தமிழக பாஜ முக்கிய தலைவர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், மத்திய அமைச்சர் எல்.முருகன், பா.ஜ., மூத்த தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை பங்கேற்கவில்லை. இந்த கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து அண்ணாமலை கூறியதாவது: அதிகமான திருமண நிகழ்ச்சிகள் இருப்பதால் பாஜ உயர்மட்ட குழுவில் பங்கேற்க செல்லவில்லை. இது குறித்து ஏற்கனவே நான் கட்சி தலைமைக்கு தகவல் கொடுத்துவிட்டேன். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.