sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

வீட்டு காவலில் பா.ஜ.,வினர் அண்ணாமலை கடும் கண்டனம்

/

வீட்டு காவலில் பா.ஜ.,வினர் அண்ணாமலை கடும் கண்டனம்

வீட்டு காவலில் பா.ஜ.,வினர் அண்ணாமலை கடும் கண்டனம்

வீட்டு காவலில் பா.ஜ.,வினர் அண்ணாமலை கடும் கண்டனம்


ADDED : பிப் 04, 2025 06:57 PM

Google News

ADDED : பிப் 04, 2025 06:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை அறிக்கை:

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் மலை தொடர்பான நிகழ்வுகளில், ஹிந்து மதத்திற்கு விரோதமாக செயல்படும் அமைப்புகளை கண்டித்தும், பாரபட்சமாக செயல்படும், தி.மு.க., அரசை கண்டித்தும், ஆலயத்தின் புனிதத்தை காக்க, இன்று நடக்க இருந்த போராட்டத்தை தடுக்க, மதுரை மாவட்டம் முழுதும் அரசு, 144 தடை விதித்துள்ளது.

ஆனால், தமிழகம் முழுதுமே, 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது போல், பா.ஜ., விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் பாண்டுரங்கன், கோவை நகர மாவட்டத் தலைவர் ரமேஷ், துாத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவர் சரவணகிருஷ்ணன், சேலம் நகர மாவட்டத் தலைவர் சசிகுமார் என பலரையும் கைது செய்தும், வீட்டுக் காவலில் வைத்தும், ஜனநாயக விரோதமாக நடந்து கொள்கிறது தி.மு.க., அரசு.

அனைத்துக்கும் ஒரு எல்லை உண்டு. தி.மு.க., அமைச்சருக்கு ஒரு நியாயம், மக்களுக்கு ஒரு நியாயமா?

பொறுமையும், சகோதரத்துவமும் கொண்ட, தமிழக மக்களை சீண்டிக் கொண்டே இருக்கும், தேவையற்ற நடவடிக்கைகளுக்கு துணை செல்வதை, அரசு உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் உடனே விடுவிப்பதோடு, ஜனநாயக ரீதியாகப் போராட அனுமதி வழங்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us