sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 07, 2025 ,கார்த்திகை 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 பா.ஜ.,வின் மாயாஜால வேலைகள் எடுபடாது: ரகுபதி

/

 பா.ஜ.,வின் மாயாஜால வேலைகள் எடுபடாது: ரகுபதி

 பா.ஜ.,வின் மாயாஜால வேலைகள் எடுபடாது: ரகுபதி

 பா.ஜ.,வின் மாயாஜால வேலைகள் எடுபடாது: ரகுபதி


ADDED : டிச 07, 2025 02:17 AM

Google News

ADDED : டிச 07, 2025 02:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை: “பா.ஜ.,வின் மாயாஜால வேலைகள் தமிழகத்தில் எடுபடாது,” என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.

புதுக்கோட்டையில், அவர் அளித்த பேட்டி:

திருப்பரங்குன்றம் விவகாரத்தை வைத்து, தமிழகத்தில் பா.ஜ., காலுான்ற முடியாது. இந்தியாவில் உள்ள மற்ற ஹிந்துக்களில் இருந்து தமிழக ஹிந்துக்கள் வேறுபட்டவர்கள். பா.ஜ.,வின் மாயாஜால வேலைகள் தமிழகத்தில் எடுபடாது.

திருப்பரங்குன்றம் விஷயத்தில், நான் என்ன தவறுதலாக சொன்னேன்? தீர்ப்பில் என்ன சொல்லப்பட்டது என்பதை, தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை சொல்ல வேண்டும்.

தீர்ப்பை மாற்றி சொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. அ.தி.மு.க., ஆட்சியில் சொல்லப்பட்ட தீர்ப்பை தான், நாங்கள் நடைமுறைப்படுத்தியுள்ளோம்.

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு போல ஜோக்கர், வேறு யாரும் இல்லை. தமிழக மக்கள் அ.தி.மு.க.,வினரை நன்கு புரிந்து கொண்டுள்ளனர்.

நாங்கள் சட்டத்தை மதிப்பவர்கள். எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என நம்புகிறோம். தமிழர்கள், திருப்பரங்குன்றம் விவகாரத்தில், எது சரி எது தவறு என்பதை உணர்ந்து செயல்படுவர்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us