sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

இன்டர்நெட் பிரவுசிங் சென்டர்களில் ஆபாசம்? "கிடுக்கிப்பிடி' போட்டு கோவை போலீஸ் அதிரடி

/

இன்டர்நெட் பிரவுசிங் சென்டர்களில் ஆபாசம்? "கிடுக்கிப்பிடி' போட்டு கோவை போலீஸ் அதிரடி

இன்டர்நெட் பிரவுசிங் சென்டர்களில் ஆபாசம்? "கிடுக்கிப்பிடி' போட்டு கோவை போலீஸ் அதிரடி

இன்டர்நெட் பிரவுசிங் சென்டர்களில் ஆபாசம்? "கிடுக்கிப்பிடி' போட்டு கோவை போலீஸ் அதிரடி


ADDED : ஜூலை 15, 2011 09:44 PM

Google News

ADDED : ஜூலை 15, 2011 09:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : 'இன்டர்நெட் பிரவுசிங் சென்டர்களில்' சட்டவிரோத செயல்களை தடுக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ள கோவை மாநகர போலீசார், அதற்கான விதிமுறைகளை வெளியிட்டுள்ளனர்.

முகவரி அடையாள அட்டையில்லாத நபர்களை பிரவுசிங் செய்ய அனுமதிக்கக்கூடாது என்றும் உரிமையாளர்களை எச்சரித்துள்ளனர்.



கோவை மாநகர எல்லைக்குள் பள்ளி, கல்லூரி அருகிலும், பிற இடங்களிலும் எண்ணற்ற ' இன்டர்நெட் பிரவுசிங் சென்டர்கள்' செயல்படுகின்றன. சில பிரவுசிங் சென்டர்களில் 'பிரைவெசி' என்ற பெயரில் முழுமையாக மூடப்பட்ட நிலையில் 'கேபின்'கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், இன்டர்நெட் பிரவுசிங் செய்யும் நபர்கள் ஆபாச படங்களை பார்ப்பதாகவும், சிலர் ஜோடியாக வந்து ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடுவதாகவும் போலீசாருக்கு அடுத்தடுத்து புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. மேலும் சிலர், தங்களது வேண்டாத நபர்களின் போட்டோவை 'மார்பிங்' செய்து, ஆபாச படமாக இன்டர்நெட்டில் உலவ விடுவதாகவும் 'சைபர் கிரைம்' போலீசாருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

இதைத்தொடர்ந்து, பிரவுசிங் சென்டர் நடத்துவோருக்கு போலீஸ் கமிஷனர் அமரேஷ் புஜாரி அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பிரவுசிங் சென்டர் நடத்துவோர், கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கட்டாயம் 'லைசென்ஸ்' பெற வேண்டும். கம்ப்யூட்டர் அறையின் உள்பகுதியில் முழுமையாக மூடப்பட்ட நிலையில் 'கேபின்' அமைக்கக் கூடாது. வெளியில் இருந்து பார்க்கும்போது கம்ப்யூட்டர் ஸ்கிரீனுக்கு மேற்பகுதியை மறைக்கும் வகையில் 2.5 அடி மட்டுமே தடுப்பு அமைத்திருக்க வேண்டும். பிரவுசிங் சென்டருக்கு ஜனவரி முதல் டிசம்பர் வரையிலான காலண்டர் ஆண்டு கணக்கீட்டின்படி லைசென்ஸ் வழங்கப்படும்; கட்டணம் 75 ரூபாய். லைசென்ஸ் காலக்கெடு முடியும் தருவாயில், அதாவது ஜனவரியில் புதுப்பித்துக்கொள்ள வேண்டும்.

பிரவுசிங் சென்டரின் உரிமையாளர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பொறுப்பாளர், லைசென்ஸ் விதிமுறைகளுக்கு கட்டுப்படுவதாக 20 ரூபாய் முத்திரைத்தாளிலான உறுதிமொழி பத்திரத்தில் கையெழுத்திட்டு, 'நோட்டரி பப்ளிக்' வக்கீலிடம் ஒப்புகை சான்று பெற்று சமர்ப்பிப்பது அவசியம்.

லைசென்ஸ் பெற்ற பின், பிரவுசிங் சென்டர் நடத்துவதற்கான விதிமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். பிரவுசிங் செய்ய வரும் நபர்களின் அடையாள அட்டையை பரிசோதித்து, அதிலுள்ள விபரங்களை பதிவேட்டில் எழுதி வைக்க வேண்டும். வாடிக்கையாளர் எந்த கம்ப்யூட்டரில் பிரவுசிங் செய்கிறார், உள்ளே நுழைந்த நேரம் என்ன, வெளியேறிய நேரம் என்ன, பிரவுசிங் செய்ய எந்த வகையான அடையாள அட்டையை சமர்ப்பித்துள்ளார் என்ற விபரங்கள் பதிவேட்டில் இடம்பெற்றிருக்க வேண்டும். இந்த ஆவணங்களை ஓராண்டு வரை பராமரித்து, போலீசார் கோரும்போது சமர்ப்பிக்க வேண்டும்.

ஆட்சேபகரமான இணைய தளங்களை வாடிக்கையாளர்கள் பயன்படுத்ததாதவாறு பிரவுசிங் சென்டர் உரிமையாளர் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும் எந்தெந்த இணைய தளங்களை பார்வையிட்டு பயன்படுத்தியுள்ளனர் என்பதை கண்டறியும் வகையிலான பிரத்யேக 'சாப்ட்வேர்'களை பிரவுசிங் சென்டரில் நிறுவியிருக்க வேண்டும். அதுபற்றிய விபரங்களையும் ஓராண்டு வரை பராமரிக்க வேண்டும். பிரவுசிங் சென்டர் காலை 8.00 முதல் இரவு 11.00 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் (சிறப்பு அனுமதி கேட்போரின் கோரிக்கை பரிசீலிக்கப்படும்). வழக்கு விசாரணைக்காக தேவைப்படும் ஆவணங்களை போலீசார் கேட்கும் போதும், சோதனை நடத்தும்போதும் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும். இதுபோன்ற சோதனைகளின்போது இன்ஸ்பெக்டர் மற்றும் அந்த அந்தஸ்துக்கும் மேல் பதவியில் உள்ள அதிகாரிகள் மட்டுமே ஈடுபடுபவர். இவ்வாறு, சுற்றறிக்கையில் அமரேஷ் புஜாரி தெரிவித்துள்ளார்.








      Dinamalar
      Follow us