sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தியேட்டரில் குண்டு வீச்சு; திருநெல்வேலியில் திடீர் பரபரப்பு

/

தியேட்டரில் குண்டு வீச்சு; திருநெல்வேலியில் திடீர் பரபரப்பு

தியேட்டரில் குண்டு வீச்சு; திருநெல்வேலியில் திடீர் பரபரப்பு

தியேட்டரில் குண்டு வீச்சு; திருநெல்வேலியில் திடீர் பரபரப்பு

40


ADDED : நவ 16, 2024 07:37 AM

Google News

ADDED : நவ 16, 2024 07:37 AM

40


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலியில் அலங்கார் தியேட்டர் வளாகத்தில் இரண்டு மர்ம நபர்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருநெல்வேலி மேலப்பாளையத்தில் அலங்கார் தியேட்டர் ஒன்று இயங்கி வருகிறது. அண்மையில் ரிலீஸ் ஆன அமரன் படம் திரையிடப்பட்டு வருகிறது. இந்த தியேட்டர் வளாகத்தில் இன்று (நவ.,16) அதிகாலை இரண்டு மர்ம நபர்கள் 3 பாட்டில்களில் அடைத்து கொண்டு வந்த பெட்ரோல் குண்டுகளை வீசினர். பயங்கர சத்தத்துடன் வெடித்தது.அப்பகுதி மக்கள் அதிகாலையில் பதறி போயினர்.

யாருக்கும் காயம் இல்லை. தியேட்டருக்கு சேதம் பெரிதளவில் இல்லை. சம்பவ இடத்திற்கு மேலப்பாளையம் போலீசார் விரைந்தனர். குண்டு வீசிய மர்மநபர்களை வலை வீசி தேடி வருகின்றனர். குண்டு வீசி தாக்குதல் நடத்தியதற்கு காரணம், பின்னணியில் இருப்பது யார் ? என்பது குறித்து பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us