sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

காந்தி மண்டபத்தில் மது பாட்டில்கள்; தூய்மை பணி மேற்கொண்ட கவர்னர் ரவி கொந்தளிப்பு

/

காந்தி மண்டபத்தில் மது பாட்டில்கள்; தூய்மை பணி மேற்கொண்ட கவர்னர் ரவி கொந்தளிப்பு

காந்தி மண்டபத்தில் மது பாட்டில்கள்; தூய்மை பணி மேற்கொண்ட கவர்னர் ரவி கொந்தளிப்பு

காந்தி மண்டபத்தில் மது பாட்டில்கள்; தூய்மை பணி மேற்கொண்ட கவர்னர் ரவி கொந்தளிப்பு

66


UPDATED : அக் 01, 2024 02:15 PM

ADDED : அக் 01, 2024 08:57 AM

Google News

UPDATED : அக் 01, 2024 02:15 PM ADDED : அக் 01, 2024 08:57 AM

66


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'காந்தி மண்டபத்தில் கூட மது பாட்டில்கள் காணப்படுகின்றன. இது வருத்தமளிக்கிறது' என கவர்னர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.

நம் பாரத தேசத்தை தூய்மையான, சுகாதாரமான தேசமாக மாற்றும் நோக்கத்தில் 'தூய்மை பாரதம்' என்னும் திட்டத்தை மத்திய அரசு 2014-ம் ஆண்டு தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ஆண்டுதோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்னையில் காந்தி மண்டபத்தில் மாணவர்களுடன் இணைந்து தூய்மை பணியில் கவர்னர் ஆர்.என்.ரவி ஈடுபட்டார்.

அவர், நாளை (அக்.,02) காந்தி ஜெயந்தியையொட்டி, வாளியில் குப்பைகளை அள்ளி சுத்தம் செய்தார். பின்னர் நிருபர்கள் சந்திப்பில், கவர்னர் ரவி கூறியதாவது: மகாத்மா காந்தி சுதந்திர இயக்கத்தின் தலைவர் மட்டுமல்ல; அவர் தூய்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்.

காந்தி மண்டபத்தில் கூட மது பாட்டில்கள் காணப்படுகின்றன. இது வருத்தமளிக்கிறது. சுத்தம் என்பது பழக்கம்; சுத்தம் இல்லாததால் பல நோய்கள் பரவுகின்றன. அன்றாட வாழ்வில் தூய்மையை கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us