வருவாய் துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
வருவாய் துறை அலுவலர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம்
ADDED : பிப் 23, 2024 02:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம் சார்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, 2ம் கட்டமாக நேற்று, சேலம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் பணிகளை புறக்கணித்து, காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து, மாநில துணைத்தலைவர் அர்த்தனாரி கூறியதாவது:
அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட தனி ஊதியம் வழங்க வேண்டும்; 3 ஆண்டுகளுக்கு மேல் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த, 13ல் போராட்டம் நடந்தது.
தமிழக முதல்வர் பேச்சு நடத்தவில்லை. இதையடுத்து பணியை புறக்கணித்து காத்திருப்பு போராட்டத்தை துவங்கி உள்ளோம்.
இதனால் தேர்தல் பணி, சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட வருவாய் துறை பணிகள் முழுமையாக பாதிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.