வங்கதேச ஆர்டர்களை கைப்பற்ற பட்ஜெட் அறிவிப்பு கைகொடுக்கும்
/
வங்கதேச ஆர்டர்களை கைப்பற்ற பட்ஜெட் அறிவிப்பு கைகொடுக்கும்
வங்கதேச ஆர்டர்களை கைப்பற்ற பட்ஜெட் அறிவிப்பு கைகொடுக்கும்
வங்கதேச ஆர்டர்களை கைப்பற்ற பட்ஜெட் அறிவிப்பு கைகொடுக்கும்
ADDED : பிப் 04, 2025 11:13 PM
ADDED : பிப் 04, 2025 11:13 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:வங்கதேசத்தின் வர்த்தக வாய்ப்புகளை ஈர்த்து, நிரந்தர ஆர்டர்களாக தக்கவைத்துக் கொள்ள, மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் நிச்சயம் கைகொடுக்கும் என, திருப்பூர் பின்னலாடை தொழில் துறையினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.
உள்நாட்டு மானியம், தொழிலாளர் செலவு என பல்வேறு வகையில், நம் நாட்டை காட்டிலும் ஆயத்த ஆடை விலை நிர்ணயத்தில் 14 முதல் 15 சதவீதம் வங்கதேசத்தில் விலை குறைவாக இருக்கிறது. இதன் காரணமாக, வளர்ந்த நாடுகள் வங்கதேசத்தை ஆதரித்து வந்தன. ஆனால், அந்நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்பட்ட பின், குறித்த காலத்துக்குள் ஆடைகளை அனுப்பி வைக்க முடியாததால், வர்த்தகர்களின் பார்வை, இந்தியாவின் பக்கம் திரும்பியுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன், விசாரணை என்ற நிலையில் துவங்கியது, தற்காலிக ஆர்டர்களாக மாறியிருக்கிறது. வங்கதேசம் இழக்கும் வர்த்தக வாய்ப்புகளை இந்தியா நிச்சயம் ஈர்க்க முடியும் என்கின்றனர் தொழில்துறையினர்.