sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அச்சுறுத்திய 'புல்லட்' யானை சிக்கியது; மயக்க ஊசி போட்டு பிடித்தது வனத்துறை!

/

அச்சுறுத்திய 'புல்லட்' யானை சிக்கியது; மயக்க ஊசி போட்டு பிடித்தது வனத்துறை!

அச்சுறுத்திய 'புல்லட்' யானை சிக்கியது; மயக்க ஊசி போட்டு பிடித்தது வனத்துறை!

அச்சுறுத்திய 'புல்லட்' யானை சிக்கியது; மயக்க ஊசி போட்டு பிடித்தது வனத்துறை!

1


ADDED : டிச 27, 2024 07:29 PM

Google News

ADDED : டிச 27, 2024 07:29 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நீலகிரி: பந்தலூர் மக்களை அச்சுறுத்தி வந்த 'புல்லட்' என்று பெயரிடப்பட்ட யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு உள்ளது. இதில் 'புல்லட்' என்று அழைக்கப்படும் யானை தொடர்ந்து குடியிருப்புகளை, இடித்து அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை எடுத்துச் செல்கிறது.

கடந்த இரண்டு மாதங்களாக வீடுகளை சேதப்படுத்தியதுடன், மனிதர்களையும் தாக்கி கொன்றுள்ளது. இதுவரையில் 40 வீடுகளை இடித்து தள்ளியுள்ளது. இதனால், பொதுமக்கள் அச்சத்திலேயே இருந்து வருகின்றனர். மேலும், புல்லட் யானையின் அச்சுறுத்தலால், தேயிலை தோட்டத் தொழிலாளர்களும் வேலைக்கு செல்லமுடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதனையேற்று, யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக, கால்நடை மருத்துவ குழுவினர் மற்றும் கும்கி யானையுடன் வனத்துறையினர் புல்லட் யானை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

இந்த நிலையில், பந்தலூர் அருகே உள்ள அய்யங்கொல்லி பகுதியில் இன்று 'புல்லட்' யானைக்கு மயக்க ஊசியை வனத்துறையினர் செலுத்தினர். யானை மயக்க நிலையை அடைந்த பிறகு, அதன் 4 கால்களையும் கயிறு மூலம் கட்டி வைத்துள்ளனர்.

இந்த யானையை கும்கி உதவியுடன் லாரியில் ஏற்றி வேறு இடத்திற்கு கொண்டு செல்ல வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். வீடுகளை இடித்து அச்சுறுத்தி வந்த 'புல்லட்' யானை பிடிபட்டதால், கூடலூர், பந்தலூர் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us