sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ரயில் மின்பாதை கம்பி திருட்டு ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்

/

ரயில் மின்பாதை கம்பி திருட்டு ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்

ரயில் மின்பாதை கம்பி திருட்டு ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்

ரயில் மின்பாதை கம்பி திருட்டு ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்


ADDED : ஜூலை 13, 2011 01:43 AM

Google News

ADDED : ஜூலை 13, 2011 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே, நள்ளிரவில் ரயில்வே மின் கம்பி திருடப்பட்டதால், 17 ரயில்கள் இரண்டு மணி நேரம் தாமதமாக சென்றன.

சென்னையிலிருந்து நேற்று முன்தினம் இரவு, திருவனந்தபுரத்திற்கு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டது. நள்ளிரவு ஒரு மணி அளவில் விருத்தாசலம் அடுத்த பூவனூர் கிராமம் அருகே வந்தபோது, மின்பாதை துண்டிக்கப்பட்டதால் ரயில் நின்றது.பூவனூர் ரயில் நிலைய ஊழியர்கள் பார்த்த போது, பூவனூர் ரயில் நிலையத்தில் இருந்து மேப்புலியூர் கிராமத்திற்கு இடைப்பட்ட தூரத்தில், 106 மீட்டர் மின் கம்பி துண்டிக்கப்பட்டு திருடு போயிருந்தது.



விருத்தாசலம் ரயில் நிலையத்திலிருந்து டீசல் இன்ஜின் வரவழைத்து அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் விருத்தாசலத்திற்கு புறப்பட்டுச் சென்றது. ரயில் மின்பாதை துண்டிக்கப்பட்டதால், சென்னை மற்றும் திருச்சி மார்க்கத்தில் வந்துகொண்டிருந்த முத்துநகர், பொதிகை, நெல்லை, பாண்டியன், ஹவுரா, மங்களூர், மலைக்கோட்டை உள்ளிட்ட 17 ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. விழுப்புரத்தில் இருந்து ரயில்வே மின் ஊழியர்கள் விரைந்து வந்து, புதிய மின் கம்பிகளை இணைத்து அதிகாலை 3 மணிக்கு மின் இணைப்பு வழங்கியதைத் தொடர்ந்து, நிறுத்தப்பட்டிருந்த ரயில்கள் இரண்டு மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. மின் கம்பி திருடுபோனது குறித்து, விழுப்புரம் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரித்து வருகின்றனர்.








      Dinamalar
      Follow us