sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சதி செயல்களை தடுக்க ரயில் பாதைகளில் 'கேமரா'

/

சதி செயல்களை தடுக்க ரயில் பாதைகளில் 'கேமரா'

சதி செயல்களை தடுக்க ரயில் பாதைகளில் 'கேமரா'

சதி செயல்களை தடுக்க ரயில் பாதைகளில் 'கேமரா'

4


ADDED : டிச 10, 2024 02:49 AM

Google News

ADDED : டிச 10, 2024 02:49 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: குற்றங்கள் மற்றும் சதி செயல்களை தடுக்க, ரயில் தண்டவாளம் அருகே, 'சிசிடிவி கேமரா' அமைக்கும் பணியை தெற்கு ரயில்வே துவக்கி உள்ளது.

சமீப காலமாக, ரயில்கள் மீது கற்கள் வீசுவது, ரயில் பாதையில் கற்கள், டயர் வைப்பது, சிக்னலை உடைக்க முயற்சி போன்ற சதி வேலைகள் நடக்கின்றன.

ரயில் பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்ய, ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வு செய்து, 50 இடங்களை தேர்வு செய்துள்ளது. அங்கு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

இதுகுறித்து, ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறியதாவது:


ரயில்களில் வழக்கமாக நடக்கும் திருட்டுகள், கடத்தல்களை தடுக்கும் வகையில், பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். சமீப காலமாக, ரயில் பாதைகளில் சிலர் சதி வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் நடந்த சம்பவங்களில், சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில், பெரும்பாலானோர் போதை ஆசாமிகளாக இருந்தனர்.

ரயில்வே பாதுகாப்பு படை நடத்திய ரகசிய ஆய்வில், அதிக குற்றங்கள் நடக்கும், 50 இடங்களை தேர்வு செய்துள்ளோம். அங்கு ரயில் தண்டவாளம் அருகே, 'சிசிடிவி கேமரா' பொருத்த முடிவு செய்துள்ளோம்.

சென்னை பேசின்பிரிட்ஜ், கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, காட்பாடி, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, விழுப்புரம், திருவாரூர், மயிலாடுதுறை, திண்டுக்கல், காரைக்குடி; கேரளா மாநிலத்தில் திரூர், சொர்னுார் உள்ளிட்ட 50 இடங்களில், ரயில் தண்டவாளம் அருகே கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.

தற்போது, பேசின்பிரிட்ஜ் சந்திப்பு அருகில், 10க்கும் மேற்பட்ட கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us