'தி.மு.க.,வுக்கு ஆதரவு பிரசாரம்: ஊராட்சி செயலர்கள் அட்டகாசம்' பழனிசாமி வலியுறுத்தல்
'தி.மு.க.,வுக்கு ஆதரவு பிரசாரம்: ஊராட்சி செயலர்கள் அட்டகாசம்' பழனிசாமி வலியுறுத்தல்
ADDED : பிப் 08, 2026 07:35 AM

சென்னை: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை:
தமிழகம் முழுதும் உள்ள, மாவட்ட திட்ட அலுவலர்கள் ஆணையின்படி, ஊராட்சிகளில் பணிபுரியும், ஊராட்சி செயலர்கள், 125 நாள் திட்டத்தில் பணிபுரியும் 'பணித்தளப் பொறுப்பாளர்கள்' மற்றும் பணியாளர்கள், வீடு வீடாகச் சென்று, தி.மு.க., ஆட்சிக்கு ஆதரவாக, பிரசாரம் செய்து வருகின்றனர்.
கலெக்டர்கள், தி.மு.க., அரசுக்கு ஆதரவாக, பிரசாரத்தில் ஈடுபடும் ஊராட்சி செயலர்கள் உள்ளிட்டோர் மீது, உடனடியாக நடவடிக் கை எடுக்க வேண்டும்.
அ.தி.மு.க., ஆட்சி அமைந்ததும், சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட அதிகாரிகள் மீது, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கிறேன்.
கிராம பஞ்சாயத்தி ன் வளர்ச் சிக்காக பணிபுரியும் கிராம செயலர்கள், 125 நாள் வேலை திட்டப் பணியா ளர்களை, தி.மு.க., அ ரசு, தங்கள் சுய லாபத்திற்காக, தேர்தல் பிரசார வே லைகளில் ஈடுபடுத்துவது, கடும் கண்ட னத்திற்குரியது.
தேர்தல் பிரசார வேலைகளில், அவர்களை ஈடுபடுத்துவதை, முதல்வர் ஸ்டாலின் உட னடி யாக இந்த அட்டகாசத்தை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

