sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தவணை தவறியவர்களின் வீடு, மனை ஒதுக்கீடு ரத்து

/

தவணை தவறியவர்களின் வீடு, மனை ஒதுக்கீடு ரத்து

தவணை தவறியவர்களின் வீடு, மனை ஒதுக்கீடு ரத்து

தவணை தவறியவர்களின் வீடு, மனை ஒதுக்கீடு ரத்து

4


ADDED : அக் 07, 2024 02:39 AM

Google News

ADDED : அக் 07, 2024 02:39 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : வீட்டு வசதி வாரிய திட்டங்களில் ஒதுக்கீடு பெற்றவர்கள், அதற்கான தவணை தொகையை உரிய காலத்தில் செலுத்த வேண்டும். தவணை தவறியவர்களுக்கு அபராத வட்டி உள்ளிட்ட கூடுதல் தொகைகள் விதிக்கப்படும்.

இதனால், நிலுவைத் தொகை அதிகரித்ததால், வாரியத்துக்கு வர வேண்டிய வருவாய் நிலுவையும் பல மடங்காக உயர்ந்தது. இப்பிரச்னைக்கு தீர்வாக, அபராத வட்டி தள்ளுபடி திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதை பயன்படுத்தி, சலுகைகளுடன் நிலுவைத் தொகையை செலுத்தியவர்களுக்கு, விற்பனை பத்திரம் வழங்க, வாரியம் நடவடிக்கை எடுத்தது.

ஆனாலும், தமிழகம் முழுதும், 1,500க்கு மேற்பட்டோர் தவணை செலுத்தாமல் உள்ளதாக கூறப்படுகிறது. இவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க, வாரியம் உத்தரவிட்டுள்ளது.

வீட்டுவசதி வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:


தற்போது புதிதாக செயல்படுத்தும் திட்டங்களில், தவணை முறை இல்லை. ஏற்கனவே செயல்படுத்தப்பட்ட திட்டங்களில், தவணை முறையில் வீடு, மனை பெற்றவர்கள் நிலுவை வைத்துள்ளனர். பெரும்பாலானோர், ஓரிரு தவணைகளை மட்டுமே செலுத்தியவர்களாக உள்ளனர். இதனால், அவர்களுக்கான வீடு, மனை ஒதுக்கீடுகளை ரத்து செய்ய வாரியத்துக்கு முழு அதிகாரம் உள்ளது.

இருப்பினும், இத்தகையோருக்கு கடைசியாக, 30 நாட்கள் அவகாசம் அளிக்க வாரியம் முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பு, கோட்ட அலுவலகங்கள் வாயிலாக வெளியிடப்படும். அதன் பின்னும் நிலுவை வசூலாகவில்லை என்றால், சம்பந்தப்பட்ட ஒதுக்கீடுகள் ரத்து செய்யப்பட்டு, அந்த வீடு, மனைகள் வேறு நபர்களுக்கு ஒதுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us