sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கார் குண்டு வழக்கு: 3 பேருக்கு 3 நாள் என்.ஐ.ஏ., காவல்

/

கார் குண்டு வழக்கு: 3 பேருக்கு 3 நாள் என்.ஐ.ஏ., காவல்

கார் குண்டு வழக்கு: 3 பேருக்கு 3 நாள் என்.ஐ.ஏ., காவல்

கார் குண்டு வழக்கு: 3 பேருக்கு 3 நாள் என்.ஐ.ஏ., காவல்


ADDED : டிச 31, 2024 05:00 AM

Google News

ADDED : டிச 31, 2024 05:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : கோவை, கோட்டை ஈஸ்வரன் கோவில் முன், 2022, அக்., 23ல், கார் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது. இதற்கு மூளையாக செயல்பட்ட, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஜமேஷா முபின் பலியானார். இச்சம்பவம் குறித்து, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து, ஜமேஷா முபின் கூட்டாளிகள், 14 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இவர்களில், கோவை மாவட்டத்தை சேர்ந்த அபு ஹனீபா, 33, பவாஸ் ரஹ்மான், 36, சரண், 25 ஆகியோரை தங்கள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி, சென்னை பூந்தமல்லியில் உள்ள, சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதை விசாரித்த நீதிமன்றம், அபு ஹனீபா உள்ளிட்ட மூவருக்கும், ஜன., 2ம் தேதி வரை மூன்று நாட்கள், என்.ஐ.ஏ., காவல் விசாரணைக்கு அனுமதி அளித்து, நேற்று உத்தரவிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us