ADDED : ஆக 05, 2026 03:36 AM
மதுரை: துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பார்த்திபன், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
விளாத்திகுளம் அருகே பெரியசாமிபுரத்தில் தி.மு.க., சார்பில் 2023 ஜன.6 ல் பொதுக்கூட்டம் நடந்தது. அக்கட்சியின் எம்.எல்.ஏ.,மார்க்கண்டேயன் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிரதமர் நரேந்திர மோடிதான் காரணம் என்பது போன்ற கருத்துக்களை தெரிவித்தார்.
இது கண்ணியமற்ற, அடிப்படை ஆதாரமற்ற கருத்து.
பா.ஜ.,வை சேர்ந்த நான் உள்ளிட்ட சில தொண்டர்கள் சூரங்குடி போலீசில் புகார் அளித்தோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதி எல்.விக்டோரியா கவுரி விசாரித்தார். மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் மலையேந்திரன் ஆஜரானார். நீதிபதி, இதுபோன்ற வழக்குகளை விசாரிக்கும் சம்பந்தப்பட்ட நீதிபதியின் விசாரணைக்கு மாற்றப்படுகிறது,' என உத்தரவிட்டார்.
