sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பெரியசாமிக்கு எதிரான வழக்கு: சபாநாயகர் ஒப்புதல் சரியல்ல: மூத்த வழக்கறிஞர் வாதம்

/

பெரியசாமிக்கு எதிரான வழக்கு: சபாநாயகர் ஒப்புதல் சரியல்ல: மூத்த வழக்கறிஞர் வாதம்

பெரியசாமிக்கு எதிரான வழக்கு: சபாநாயகர் ஒப்புதல் சரியல்ல: மூத்த வழக்கறிஞர் வாதம்

பெரியசாமிக்கு எதிரான வழக்கு: சபாநாயகர் ஒப்புதல் சரியல்ல: மூத்த வழக்கறிஞர் வாதம்


ADDED : பிப் 13, 2024 07:14 AM

Google News

ADDED : பிப் 13, 2024 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : 'முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பாதுகாவலருக்கு வீட்டு வசதி வாரிய நிலத்தை ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் பெரியசாமிக்கு எதிராக வழக்கு தொடர, கவர்னர் மட்டுமே ஒப்புதல் வழங்க முடியும்; சபாநாயகர் ஒப்புதல் அளித்தது சரியல்ல' என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

வீட்டுவசதி வாரிய நிலத்தை ஒதுக்கியதில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், அமைச்சர் பெரியசாமி விடுவிக்கப்பட்ட உத்தரவை ஆய்வு செய்யும் விதமாக, தாமாக முன்வந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு எடுத்து உள்ளார்.

இந்த வழக்கில், நேற்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், இறுதி விசாரணைதுவங்கியது. அமைச்சர் பெரியசாமி சார்பில், டில்லி மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார்ஆஜரானார்.

விசாரணை துவங்குவதற்கு முன், சில கேள்விகளை எழுப்பி, அவற்றுக்கு விளக்கம் அளிக்கும்படி, நீதிபதி கூறினார்.

இதையடுத்து, மூத்த வழக்கறிஞர் ரஞ்சித்குமார் பதில் அளித்து வாதாடியதாவது:

முதன் முதலாக இரண்டு பேருக்கு எதிராக தான் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்போது, பெரியசாமிக்கு எதிராக வழக்கு தொடரப்படவில்லை. அதன்பின் தான், பெரியசாமி சேர்க்கப்பட்டார்.

பெரியசாமிக்கு எதிராக வழக்கு தொடர, கவர்னரிடம் ஒப்புதல் பெறுவதற்கு பதில், சபாநாயகரிடம் பெறப்பட்டுள்ளது. அமைச்சருக்கு எதிராக வழக்கு தொடர, கவர்னர் மட்டுமேஒப்புதல் வழங்கமுடியும்.

முறையாக அனுமதி பெறாமல் தொடரப்பட்ட வழக்கை விசாரிக்க முடியாது; அவ்வாறு விசாரிப்பது, நீதிமன்ற நேரத்தையும், பொது மக்களின்பணத்தையும்வீணடிப்பதாகும்.

பெரியசாமிக்கு எதிராக வழக்கு தொடர அனுமதி அளிக்க, சபாநாயகருக்கு அதிகாரம் இல்லை. அதனால், சிறப்பு நீதிமன்றம் உரிய முறையில் பரிசீலித்து, வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுசரியானது தான். இவ்வாறு அவர் வாதாடினார்.

லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில், இன்று வழக்கறிஞர் ஆஜராகி, வாதாட உள்ளார்.






      Dinamalar
      Follow us