sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், பிப்ரவரி 25, 2026 ,மாசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மானபங்கம் செய்த வி.சி., பிரமுகர் மீது வழக்கு

/

மானபங்கம் செய்த வி.சி., பிரமுகர் மீது வழக்கு

மானபங்கம் செய்த வி.சி., பிரமுகர் மீது வழக்கு

மானபங்கம் செய்த வி.சி., பிரமுகர் மீது வழக்கு


ADDED : மார் 12, 2024 02:23 AM

Google News

ADDED : மார் 12, 2024 02:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கருப்பூர்: சேலம் மாவட்டம், மூங்கில்பாடி லட்சுமி நகரை சேர்ந்த கோவிந்தராஜ், தன் மனைவி ஹரிஷா, 21, உடன் பைக்கில் மார்ச் 8 இரவு, 7:30 மணிக்கு கருப்பூர் நோக்கி சென்றார்.

தேக்கம்பட்டி அருகே பைக் சென்ற போது, சாலையில் காரை நிறுத்தி, வி.சி., மாவட்ட மாணவர் அணி அமைப்பாளராக உள்ள வெள்ளாளப்பட்டி செண்பக அரசன், 37, அவரது நண்பர்கள் துரை, ரஞ்சித்குமார், விஜய் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தார்.

அவ்வழியே சென்ற கோவிந்தராஜ், பைக்கிற்கு வழிவிடும்படி கேட்ட போது, இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆத்திரமடைந்த செண்பக அரசன் தலைமையிலானவர்கள், ஹரிஷாவை தாக்கியதோடு, ஆடையை இழுத்து மானபங்கம் செய்ய முயற்சித்தனர்.

கருப்பூர் போலீசார், செண்பக அரசன், துரை, ரஞ்சித்குமார், விஜய் மீது பெண்கள் வன்கொடுமை சட்டம், கொலை மிரட்டல் பிரிவுகளில், நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்தனர்.

அதுபோல, செண்பக அரசன், தன்னை கோவிந்தராஜ் மற்றும் நண்பர்கள் கொலை செய்ய முயற்சித்ததாக புகார் அளித்தார். அவர்கள் மூவர் மீதும் கருப்பூர் போலீசார் நேற்று முன்தினம் வழக்கு பதிந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us