sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆபத்து: புதிய தமிழகம் தலைவர் கருத்து

/

ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆபத்து: புதிய தமிழகம் தலைவர் கருத்து

ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆபத்து: புதிய தமிழகம் தலைவர் கருத்து

ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆபத்து: புதிய தமிழகம் தலைவர் கருத்து


ADDED : மே 02, 2025 07:01 AM

Google News

ADDED : மே 02, 2025 07:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாத்துக்குடி : புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நேற்று அளித்த பேட்டி:

வரும் 2026 சட்டசபை தேர்தல் பணியை துவங்கிவிட்டோம். கூட்டணி ஆட்சி என்ற கொள்கையை நோக்கி நகர்ந்து வருகிறோம். 2026ல் அமையும் ஆட்சியில் அனைத்து சமுதாய மக்களின் பிரதிநிதித்துவமும் இருக்க வேண்டும். கூட்டணியில் இடம்பெற்றவர்கள் அனைவரும் அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற கொள்கை சார்ந்த விஷயத்தை முன் வைத்து, வரும் 30ல் நாங்கள் மாநாடு நடத்துகிறோம்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு மீது கொள்கை ரீதியாக எங்களுக்கு உடன்பாடு இல்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பு, சில அரசியல் கட்சிகளின் வற்புறுத்தலுக்காக நடக்கிறது. இது மிகப்பெரிய ஆபத்தில் முடியப் போகிறது.

ஜாதிவாரி கணக்கெடுப்பில் உள்ள ஆபத்தை பா.ஜ., உணரவில்லை. இது பா.ஜ., கொள்கையும் அல்ல. ஆனால், திடீர் அறிவிப்பு வருகிறது. மிக, மிக பிற்போக்குத்தனமான நடவடிக்கையாக நான் கருதுகின்றேன். ஜாதிவாரி கணக்கெடுப்பின் நோக்கம் என்ன என்பதை, மத்தியில் ஆளும் பா.ஜ., அரசு தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us