sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பள்ளியில் ஜாதி ரீதியாக மாணவர்கள் மோதல்: தேர்வுக்காலம் என்பதால் கண்டித்து அனுப்பிய நீதிபதி!

/

பள்ளியில் ஜாதி ரீதியாக மாணவர்கள் மோதல்: தேர்வுக்காலம் என்பதால் கண்டித்து அனுப்பிய நீதிபதி!

பள்ளியில் ஜாதி ரீதியாக மாணவர்கள் மோதல்: தேர்வுக்காலம் என்பதால் கண்டித்து அனுப்பிய நீதிபதி!

பள்ளியில் ஜாதி ரீதியாக மாணவர்கள் மோதல்: தேர்வுக்காலம் என்பதால் கண்டித்து அனுப்பிய நீதிபதி!

3


ADDED : மார் 23, 2025 07:37 PM

Google News

ADDED : மார் 23, 2025 07:37 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படும் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஜாதி ரீதியாக மோதிக்கொண்ட பிளஸ் 2 மாணவர்கள் 4 பேரை போலீசார் நீதிக்குழுமம் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். தேர்வுக் காலம் என்பதால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்காத இளைஞர் நீதிக்குழும நீதிபதி, கண்டித்து அறிவுரை கூறி அனுப்பினார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்படும் ஒரு அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ம் வகுப்பு மாணவர்கள், பிளஸ் 2 மாணவர்களை அவதூறாக குறிப்பிடும் வார்த்தைகளை பள்ளி மேஜைகளில் எழுதி வைத்ததாக புகார் எழுந்தது.

இதன் காரணமாக 11ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது, மேலும் இது ஜாதி ரீதியாகத் தீவிரமடைந்தது. இந்த விவகாரத்தில், ஜாதி ரீதியாக மோதிக்கொண்ட பிளஸ் 2 மாணவர்கள் 4 பேர் போலீசாரிடம் சிக்கினர்.

இவர்கள் நான்கு பேரையும் போலீசார் திருநெல்வேலி இளைஞர் நீதிமன்ற குழுமத்தில் ஆஜர் செய்தனர். தற்போது தேர்வுக் காலம் என்பதால், 'இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது' என அவர்களை எச்சரித்த நீதிபதி, கடும் நடவடிக்கை எடுக்காமல், கண்டித்து அனுப்பி வைத்தார்.






      Dinamalar
      Follow us