sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பொன்.மாணிக்கவேலிடம் சிபிஐ விசாரணை

/

பொன்.மாணிக்கவேலிடம் சிபிஐ விசாரணை

பொன்.மாணிக்கவேலிடம் சிபிஐ விசாரணை

பொன்.மாணிக்கவேலிடம் சிபிஐ விசாரணை

7


UPDATED : ஆக 10, 2024 04:12 PM

ADDED : ஆக 10, 2024 02:28 PM

Google News

UPDATED : ஆக 10, 2024 04:12 PM ADDED : ஆக 10, 2024 02:28 PM

7


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐ.ஜி., பொன்.மாணிக்கவேலிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் பணியாற்றிய போது சிலை கடத்தல்காரர்களுடன் கூட்டு சேர்ந்து பொன்.மாணிக்கவேல் சதியில் ஈடுபட்டார் என அதே பிரிவில் பணியாற்றி சஸ்பெண்ட் செய்யப்பட்ட காதர் பாட்ஷா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2018 ல் வழக்கு தொடர்ந்தார். இதை சிபிஐ விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் 2023ம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

சென்னை பாலவாக்கத்தில் உள்ள பொன்.மாணிக்கவேல் வீட்டிற்கு வந்த சி பிஐ அதிகாரிகள் சுமார் 7.5 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு பிறகு பொன்.மாணிக்கவேல் நிருபர்களிடம் கூறியதாவது: என் மீது ஓராயிரம் வழக்குகள் உள்ளன. சாகும் விசாரணை நடக்கும். ஓய்வு பெற்ற பிறகும், சிலைகள் மாயம் குறித்து புகார் அளித்து வருகிறேன். என்னிடம் உள்ள ஆவணங்களை கொடுத்து உதவி உள்ளேன். உங்களின் நேர்மையில் எள்ளளவும் சந்தேகம் இல்லை என கைக்கூப்பி வணக்கம் தெரிவித்தபடி சிபிஐ அதிகாரிகள் வந்தனர். நடராஜர் சிலை கடத்தல் வழக்கில் ஒரு குற்றவாளியை கூட கைது செய்ய முடியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us