sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, பிப்ரவரி 15, 2026 ,மாசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

10ம் வகுப்பில் முதல் பொதுத்தேர்வு கட்டாயம்: சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தல்

/

10ம் வகுப்பில் முதல் பொதுத்தேர்வு கட்டாயம்: சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தல்

10ம் வகுப்பில் முதல் பொதுத்தேர்வு கட்டாயம்: சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தல்

10ம் வகுப்பில் முதல் பொதுத்தேர்வு கட்டாயம்: சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தல்


ADDED : பிப் 10, 2026 09:52 PM

Google News

ADDED : பிப் 10, 2026 09:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், இந்த ஆண்டு அமலுக்கு வரும் இரண்டாம் தேர்வு என்பது மதிப்பெண் மேம்பாடுக்கானது; முதல் தேர்வை அவசியம் எழுத வேண்டும்' என, சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது.

சி.பி.எஸ்.இ., மாணவர்களுக்கு, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள், வரும் 17 முதல் துவங்க உள்ளன. இதில், 26 லட்சம் மாணவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், தேசிய கல்வி கொள்கையின்படி, இந்த ஆண்டு இரண்டு பொதுத்தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. இது குறித்து, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும், குழப்பம் நிலவுகிறது. முதல் தேர்வு எழுதாமல், இரண்டாம் தேர்வை மட்டும் எழுதலாமா என, சிலர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இது குறித்து, சி.பி.எஸ்.இ., அளித்துள்ள விளக்கம்:

வரும் மே 15 முதல், ஜூன் 1 வரை நடக்க உள்ள இரண்டாம் பொதுத்தேர்வில், அதிகபட்சமாக மூன்று பாடங்களை மட்டுமே எழுத முடியும். இந்த தேர்வு, மதிப்பெண் அதிகரிப்புக்காக வழங்கப்படும் வாய்ப்பு.

எனவே, முதல் பொதுத்தேர்வில் அனைவரும் பங்கேற்பது கட்டாயம். இரண்டாம் தேர்வில், விருப்பமுள்ளோர் மட்டுமே பங்கேற்கலாம்.

முதல் தேர்வு எழுதாமல், இரண்டாம் தேர்வை எதிர்கொள்ள முடியாது. இரண்டு தேர்வுகளை எழுதினால், ஒரு பாடத்தில், எந்த தேர்வில், அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ, அது கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us