விளையாட்டு ஆணைய விடுதி மாணவர்களுக்கு 'சாம்பியன்ஸ் கிட்'
விளையாட்டு ஆணைய விடுதி மாணவர்களுக்கு 'சாம்பியன்ஸ் கிட்'
ADDED : நவ 12, 2024 03:25 AM

சென்னை: சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடந்த இந்நிகழ்ச்சியில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 15 கோடி ரூபாய் செலவில் விளையாட்டு வளாகம், மதுரையில் 6 கோடி ரூபாய் செலவில் ஒலிம்பிக் அகாடமி கட்ட, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக அவர் அடிக்கல் நாட்டினார்.
விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதிகளில் தங்கி பயிலும் 553 விளையாட்டு வீரர் -- வீராங்கனையருக்கு, 'சாம்பியன்ஸ் கிட்' என்ற விளையாட்டு உபகரணங்களையும் வழங்கினார்.
தயங்க வேண்டாம்
அவர் பேசியதாவது:
படிப்புடன் தலைசிறந்த வீரர் - வீராங்கனையரை உருவாக்கும் களமாக விளையாட்டு விடுதிகள் உள்ளதால், தமிழகத்தில் நடக்கும் தேசிய, மாநில விளையாட்டு போட்டிகளை, அவர்கள் நேரில் பார்க்க வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும்.
நீங்கள் விளையாட்டில் எதை சாதிக்க நினைத்தாலும், பொருளாதார தடையை எண்ணி தயங்க வேண்டாம். உங்களுக்கு உதவ தான், 'தமிழ்நாடு சாம்பியன்ஸ்' அறக்கட்டளை உள்ளது.
இதுவரை அறக்கட்டளை வாயிலாக, 14 கோடி ரூபாய் அளவுக்கு, 600க்கும் மேற்பட்டோருக்கு உதவி உள்ளோம்.
அதை பயன்படுத்தி, தமிழகத்தை நாட்டின் விளையாட்டு தலைநகராக்கும் வகையில், வீரர் - வீராங்கனையர் விளையாட்டில் சிறக்க வேண்டும். ஒவ்வொருவரும் பெறும் வெற்றி, மாநிலத்துக்கானது, நாட்டுக்கானது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
செஸ் சாம்பியன்
இந்திய சூப்பர் கிளாசிக்கல் செஸ் போட்டி, 'சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் - 2024' நிறைவு விழாவில் பங்கேற்ற விளையாட்டு வீரர் -- வீராங்கனையருக்கு பரிசு வழங்கும் விழா, நேற்று இரவு சென்னையில் நடந்தது.
இதில், 'செஸ் மாஸ்டர்ஸ்' பிரிவில், அரவிந்த் சிதம்பரம் இறுதி போட்டிக்கு தகுதி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
இந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்ட 'சேலஞ்சர்ஸ்' போட்டியில், 'பிரணவ்' சாம்பியன் பட்டம் பெற்றார்.
இந்நிகழ்ச்சியில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை கூடுதல் தலைமை செயலர் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் மேகநாத ரெட்டி.
செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் விஸ்வநாதன் ஆனந்த், குகேஷ் இந்திய செஸ்பேஸ் தலைமை நிர்வாக அதிகாரி சாகர்ஷா, கிராண்ட் மாஸ்டர் ஸ்ரீநாத் நாராயணன் மற்றும் செஸ் விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர்.