ADDED : டிச 01, 2024 02:46 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்பரம்பாக்கம் ஏரி 3.645 டி.எம்.சி., கொள்ளளவும், நீர் மட்ட ஆழம் 24 அடியும் கொண்டது. 'பெஞ்சல்' புயல் காரணமாக இடைவிடாது பெய்த கன மழையால், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தது.
காலை நீர் வரத்து 449 கன அடியாகவும், நீர் மட்டம் 18.59 அடியாகவும் இருந்தது. ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் கொட்டித் தீர்த்த கன மழையால், நீர் வரத்து வினாடிக்கு 4,856 கன அடியாக அதிகரித்தது.
இதனால், ஏரியின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
நேற்று மாலை 4:00 மணி நிலவரப்படி ஏரியின் நீர் மட்டம், 19.31 அடியாகவும், கொள்ளளவு 2.436 டி.எம்.சி.,யாகவும் உயர்ந்தது. நீர் மட்டம் 20 அடியை நெருங்கியதால், ஏரியை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.