sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சாலைகளே தெரியாத அளவுக்கு பனிமூட்டம்; சென்னையில் ரயில்கள் வருகையில் தாமதம்

/

சாலைகளே தெரியாத அளவுக்கு பனிமூட்டம்; சென்னையில் ரயில்கள் வருகையில் தாமதம்

சாலைகளே தெரியாத அளவுக்கு பனிமூட்டம்; சென்னையில் ரயில்கள் வருகையில் தாமதம்

சாலைகளே தெரியாத அளவுக்கு பனிமூட்டம்; சென்னையில் ரயில்கள் வருகையில் தாமதம்


ADDED : ஜன 28, 2025 10:21 AM

Google News

ADDED : ஜன 28, 2025 10:21 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சென்னையில் கடும் பனிப்பொழிவு காரணமாக ரயில்கள் வருகையில் தாமதம் நிலவியது.

தமிழகத்தில் இருந்து வடகிழக்கு பருவமழை விலகியதன் எதிரொலியாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இன்று கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. நகரின் முக்கிய பகுதிகளான பிராட்வே, எழும்பூர், நுங்கம்பாக்கம், கிண்டி உள்ளிட்ட இடங்களில் கடும் பனிமூட்டம் நிலவியது.

அண்ணாசாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை ஆகிய பகுதிகளிலும் கடும் பனிமூட்டம் காணப்பட்டது. சாலைகளே தெரியாத அளவுக்கு புகை போல பனி படர்ந்ததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகன ஓட்டிகள் சென்றனர்.

கடும் பனிமூட்டம் எதிரொலியாக சென்னையில் ரயில்களின் வருகையில் தாமதம் ஏற்பட்டது. சேரன் எக்ஸ்பிரஸ், நெல்லை, முத்துநகர் ரயில்கள் பனிமூட்டம் காரணமாக 20 நிமிடங்கள் தாமதமாக சென்னை வந்தடைந்தன. புறநகரிலும் மின்சார ரயில்கள் சேவையில் பாதிப்பு காணப்பட்டது.






      Dinamalar
      Follow us