sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 21, 2025 ,ஐப்பசி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சென்னையில் டீ குடிக்க போன ஐ.ஐ.டி. மாணவிக்கு பாலியல் தொல்லை!

/

சென்னையில் டீ குடிக்க போன ஐ.ஐ.டி. மாணவிக்கு பாலியல் தொல்லை!

சென்னையில் டீ குடிக்க போன ஐ.ஐ.டி. மாணவிக்கு பாலியல் தொல்லை!

சென்னையில் டீ குடிக்க போன ஐ.ஐ.டி. மாணவிக்கு பாலியல் தொல்லை!

33


UPDATED : ஜன 15, 2025 12:45 PM

ADDED : ஜன 15, 2025 12:10 PM

Google News

UPDATED : ஜன 15, 2025 12:45 PM ADDED : ஜன 15, 2025 12:10 PM

33


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: டீ குடிக்க போன சென்னை ஐ.ஐ.டி. மாணவி பாலியல் தொல்லைக்குb ஆளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சென்னை அண்ணா பல்கலையில் மாணவி ஒருவருக்கு நிகழ்ந்த பாலியல் அத்துமீறல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதன் பின்னர் புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலையில் வடமாநில மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.

இந்த இரு சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் நிலையில், சென்னை ஐ.ஐ.டி., மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளான சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பாதிப்புக்குள்ளான மாணவி, சம்பவம் நடைபெற்ற தினத்தில் ஐ.ஐ.டி.க்கு வெளியே உள்ள பகுதியில் உள்ள டீக்கடைக்குச் சென்றுள்ளார்.

அப்போது அங்கு பணியாற்றிய உ.பி., மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீராம் என்பவர் மாணவியிடம் அத்துமீறி நடந்து கொண்டார். அதிர்ச்சி அடைந்த மாணவி போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரை தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், ஸ்ரீராமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பாலியல் தொல்லை குறித்து சென்னை ஐ.ஐ.டி, நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது;

இந்த சம்பவம் ஐ.ஐ.டி., வளாகத்தில் நடைபெறவில்லை. கல்வி நிறுவனத்துக்கு வெளியே மாணவி டீ குடிக்க போன போது நடந்துள்ளது.

கைதான நபருக்கும் ஐ.ஐ.டி.க்கும் எவ்வித தொடர்பும் இல்லை. மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் வெளியே உள்ள பேக்கரியில் பணியாற்றி உள்ளார். மாணவி நேற்று மாலை அவர் ஐ.ஐ.டி., வளாகத்திற்கு வெளியே உள்ள பேக்கரிக்குச் சென்ற போது பாலியல் தொல்லை நிகழ்ந்துள்ளது.

பாலியல் தொல்லை கொடுத்த நபரை மாணவியின் நண்பர் உள்ளிட்டோர் போலீசில் ஒப்படைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவிக்கு அனைத்து வகையிலும் ஐ.ஐ.டி., நிர்வாகம் உறுதுணையாக இருக்கும்.

மாணவர்கள் வெளியே செல்லும் போது முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சென்னை ஐ.ஐ.டி., வளாகம் முழுவதும் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மாணவர்கள், குடியிருப்பவர்களின் பாதுகாப்புக்கு அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us