சென்னையில் மூத்த குடிமக்களுக்கு ஜன.31 வரை கட்டணமில்லா பஸ் பயண டோக்கன்: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
சென்னையில் மூத்த குடிமக்களுக்கு ஜன.31 வரை கட்டணமில்லா பஸ் பயண டோக்கன்: போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு
ADDED : டிச 21, 2025 07:22 PM

சென்னை: மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பயண டோக்கன் ஜன 31ம் தேதி வரை வழங்கப்படும் என்று சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவு;
மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் சென்னை சார்ந்த மூத்த குடிமக்களுக்கான ஜனவரி 2026 முதல் ஜூன் 2026 வரை பயன்படுத்தக்கூடிய ஒரு மாதத்திற்கு 10 டோக்கன்கள் வீதம் 6 மாதத்திற்கான கட்டணமில்லா பஸ் பயண டோக்கன்கள் வழங்குதல் மற்றும் அடையாள அட்டை புதுப்பித்தல் / புதிய பயனாளிக்கு வழங்குதல் ஆகியவை இன்று(டிச.21) முதல் வழங்கப்படுகிறது. பயண டோக்கன்கள் 31 ஜனவரி, 2026 வரை வழங்கப்படும்.
மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பஸ் பயண டோக்கன்கள் காலை 08.00 மணி முதல் இரவு 07.30 வரை அடையாறு, திருவான்மியூர், பூந்தமல்லி, மாதவரம் என மொத்தம் 42 மையங்களில் வழங்கப்படும்.
இவ்வாறு அந்த எக்ஸ் வலைதள பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

