sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 'தேனாண்டாள் பிலிம்ஸ்' உரிமையாளர் மீது காசோலை மோசடி வழக்கு

/

 'தேனாண்டாள் பிலிம்ஸ்' உரிமையாளர் மீது காசோலை மோசடி வழக்கு

 'தேனாண்டாள் பிலிம்ஸ்' உரிமையாளர் மீது காசோலை மோசடி வழக்கு

 'தேனாண்டாள் பிலிம்ஸ்' உரிமையாளர் மீது காசோலை மோசடி வழக்கு


ADDED : டிச 28, 2025 01:59 AM

Google News

ADDED : டிச 28, 2025 01:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: பேட்ட, காஞ்சனா- 3 படங்களுக்கான வெளிநாட்டு உரிமை பெற்று தரும் விவகாரத்தில், 'தேனாண்டாள் பிலிம்ஸ்' நிறுவன உரிமையாளர் முரளிக்கு எதிராக, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், காசோலை மோசடி வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இப்படங்களின் வெளிநாட்டு உரிமையை பெற்றுத் தருவதாக, தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளர் முரளி, மலேஷியாவில் உள்ள 'மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன்' என்ற நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்துள்ளார்.

இதற்காக, 2018ல், மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம், 30 கோடி ரூபாயை முரளிக்கு வழங்கி இருந்தது. ஆனால் ஒப்பந்தப்படி, இரண்டு படங்களின் வெளிநாட்டு உரிமையை, முரளி பெற்று தரவில்லை. இதைத்தொடர்ந்து, 15 கோடி ரூபாயை மட்டும், மலேஷிய நிறுவனத்திற்கு முரளி திரும்ப அளித்திருந்தார்.

மீதி தொகை திரும்ப செலுத்தாததை தொடர்ந்து, சென்னை மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டு, முரளி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பின், 10 கோடி ரூபாய்க்கான காசோலையை, மலேஷியா நிறுவனத்திற்கு முரளி கொடுத்திருந்தார். இந்த காசோலை, வங்கியில் பணம் இல்லாத காரணத்தால் திரும்பியுள்ளது.

இதையடுத்து, முரளிக்கு எதிராக, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில், மாலிக் ஸ்ட்ரீம் கார்ப்பரேஷன் நிறுவனம், காசோலை மோசடி வழக்கு தொடர்ந்துள்ளது.






      Dinamalar
      Follow us