நாடு போற்றும் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
நாடு போற்றும் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்: முதல்வர் ஸ்டாலின் புகழாரம்
ADDED : நவ 27, 2025 08:51 AM

சென்னை: நாடு போற்றும் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்கின் புகழ் ஓங்குக என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார்.
அவரது அறிக்கை: நாடு போற்றும் சமூகநீதிக் காவலர் விபிசிங்கின் புகழ் ஓங்குக. தமிழகமும், கருணாநிதியும் மிகவும் நேசித்த தலைவர்; என் மீது அன்பு காட்டியவர். பதவிகளைத் துச்சமாக நினைத்து, சமூக நீதியை உயிர்க் கொள்கையாக மதித்தவர். தமிழகத்திற்கும், அவருக்கும் இருக்கும் உறவின் வெளிப்பாடாக உயர்ந்து நிற்கிறது 2023ம் ஆண்டு இதே நாளில் நான் திறந்து வைத்த வி.பி.சிங்கின் முழுவுருவச் சிலை.
EWS, NEET என விதவிதமான வழிகளில் சமூகநீதியைக் குழிதோண்டிப் புதைக்கும் ஆட்சியாளர்கள் மத்தியில் இருக்கும்போது வி.பி.சிங் போன்ற பிரதமரை இன்னும் கூடுதலாகவே 'மிஸ்' செய்கிறோம். சொல்லிலும் செயலிலும் தமிழர்களின் நண்பராக விளங்கிய முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கின் நினைவுநாளில் அவரது சமூகநீதிச் சாதனைகளைப் போற்றி வணங்குகிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

